வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்னச் சொல்லாண்மை புகழவொண்ணாக் கருணை சோதி சுத்தன்எங்கள் காந்திமகான் நாமம் வாழ்க. 4அணுகுண்டுவித்தைகளும் அணுக ஒண்ணா அப்பாலுக்கு அப்பாலாம் அறிவாய் நிற்கும் இணையற்ற பெருங்கருணை எல்லாம் வல்ல இறைவனையே மூச்சாக இழுத்துப் பேசித் துணைகொண்டு அவனருளைத் தொடர்ந்த காந்தித் தூயவனே இந்தியத்தாய் சோதியாகும் அணைகண்டு மதவெறியை அடக்கத் தேக்க அவன்வழியே மக்களுக்கு அமைதல் வேண்டும். 5 சாந்தவழிஉலகமெலாம் போற்ற வேண்டும்; சத்தியத்தை அரியணையில் ஏற்ற வேண்டும்; மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும்; மக்களிடம் அன்புஅறங்கள் நிறைய வேண்டும்; சோர்ந்துழலும் ஏழையெலாம் சுகிக்க வேண்டும்; சுத்தர்களே அரசாட்சி வகிக்க வேண்டும்; காந்திமகான் திருநாமம் வாழ வேண்டும்; கடவுள்என்ற பெருங்கருணை காக்க வேண்டும். 6 250. சத்குருவானகாந்தி துறந்தவர் மிகுந்த நாட்டைத் துறந்திடும் துன்பம் எல்லாம் துறந்தவர் குறைந்த நாட்டைத் தொடர்ந்திடும் துன்பம் எல்லாம் அறிந்தவர் மொழிக ளாலும் அனுபவ அறிவி னாலும் அறிந்தனம் அதனை இந்தத் தேசமும் மறந்தது அந்தோ! 1 |