253. மாந்தருக்குள்மாமணி காந்தியெனும் பேரொளியே! கருணைபொழி வான்முகிலே! சாந்திநிறை பாத்திரமே! சன்மார்க்க சாத்திரமே! மாந்தருக்குள் மாமணியே! மாநிலத்தின் அற்புதமே! ஏந்துபுகழ் மோகனமே! என்சொல்லி அஞ்சலிப்போம். 1 இதமுரைக்கும் வானொலியே! இருள்கிழிக்கும் மின்விளக்கே! பதமறிந்த பேச்சாளா! பயனறிந்த எழுத்தாளா! மதவெறிக்கே பலிபுகுந்த மாயாப் பெரும்புகழே! துதிஉரைக்கச் சொல்லறியோம் தொழுகின்றோம் துணைபுரிவாய்; 2 அன்பெடுத்ததிருவுருவே! அருள்அமரும் ஆசனமே! துன்பமுற்றோர் துணைக்கரமே! துயர்நீ்க்கும் தூதுவனே! இன்பமெலாம் பிறர்க்குதவி இன்னல்எலாம் தாங்கிநிற்கும்; தென்புஇருக்கும் தேசிகமே! திருவடிக்கே அஞ்சலித்தோம்! 3 இல்லறத்தின்சிறப்பிடமே! துறவறத்தின் இருப்பிடமே! நல்லறங்கள் யாவினுக்கும் நடுவான நன்நெறியே! |