;குத்துஈட்டிஒருபுறத்தில் குத்த வேண்டும் கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும் ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி நாற்புறமும் பலர்உதைத்து நலியத்திட்ட அத்தனையும் நான்பொறுத்தே அகிம்சை காத்தும் அனைவரையும் அதைப்போல நடக்கச்சொல்லி ஒத்துமுகம் மலர்ந்(து) உதட்டில் சிரிப்பினோடும் உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்தஆசை; 5 என்றுரைத்தகாந்தியைநாம் எண்ணிப் பார்த்தால் எலும்புஎல்லாம் நெக்குநெக்காய்இளகும் அன்றோ? நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில் நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வதுண்டோ? கன்றினுக்குத் தாய்போல உயிர்கட் காகக் கரைந்துருகும் காந்தியைநாம் நேரில்கண்டோம் இன்றுலகில் துயர்நீக்கச் சிறந்த மார்க்கம் எடுத்துரைக்கக் கொடுத்துவைத்தோம்இருந்து கேட்க. 6 கவிராசர் கற்பனைக்கும்எட்டாத தீரம் கடல்என்றால் குறைவாகும் கருணைவெள்ளம் புவிராசர் தலைவணங்கும் புனித வாழ்க்கை பொறுமைஎனும் பெருமைக்குப் போற்றும்தெய்வம் தவராச யோகியர்கள் தேடும் சாந்தி தளர்வாகும் எழுபதுடன் ஒன்பது ஆண்டில் யுவராச வாலிபர்க்கும் இல்ல ஊக்கம் ஒப்புஅரிய காந்தியரால் உலகம்வாழ்க! 7 271. சங்கநாதம்கேட்குது சாந்த காந்தி சத்தி யத்தின் சங்க நாதம் கேட்குது! ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை அதிலிருக்கும் நன்மையை |