454நாமக்கல் கவிஞர் பாடல்கள்


இன்னும் துயர்வரினும் - உன்றன்
       இனமுறை மாறாதே!
சின்னத் தனங்களிலே - என்றும்
       சிக்கிக்கொள் ளாதேநீ.       12

இம்சை புரிந்தவர்கள் - அந்த
       இம்சையி னால்அழிவார்!
வம்ச குணம்உனதாம் - சாந்த
       வாய்மை மறவாதே.       13

சண்டைகள் விட்டுஒழியும் - பல
       சச்சர வும்போகும்!
அண்டி உனைவணங்கிப் - பலர்
       அமைதி அறிந்திடுவார்.       14

அந்தக் குரல் அறிந்தேன்; - அதுவே
       அன்னையின் பொன்பொழிதான்!
சிந்தை தெளிந்துவிட்டேன் - தெய்வ
       சிந்தனை செய்திருப்பேன்.       15

279. சண்டமாருதம்

சண்ட மாருதம் வருகுதடா!
       சமரச உணர்ச்சிகள் பெருகுதடா!
கண்டு மாநிலம் கலங்கிடினும்
       கற்றவர் உள்ளம் துலங்கிடுமே.       1

பேரைக் கேட்டால் பயமாகும்!
       பெறுகிற நன்மைகள் நயமாகும்!
ஊரைக் கேட்டால் தெரியாது!
       உள்ளம் சொல்லும் சரியாக.       2

காற்றோடு மழையும் இடியிடிக்கும்!
       கடும்போர் நடந்திடும் வெடிவெடிக்கும்!
மாற்றிடும் உலகின் வாழ்வுகளை!
       மறைத்திடும் ஏற்றத் தாழ்வுகளை. 3