புலவர் சிவ. கன்னியப்பன் 495

அடையாத துன்பங்கள்
              அவைவந்த போதும்
       அநியாயம் எண்ணாத
              தமிழ்நாடு வாழ்க!       4

299. தீண்டாமையை விலக்குவதற்குஎதிர்ப்பா!

தீண்டாமை போவ(து) என்றால் தின்பதும் உண்ப(து)அல்ல
தீண்டாமை தீர்வ(து) என்றால் தீண்டியே ஆவ(து)அல்ல
தீண்டாமை விலக்க(ல்) என்றால் திருமணம்புரிவ(து) அல்ல
தீண்டாத(து) என்றோர் சாதி இல்லையெனத் தெளிவதேயாம்.       1

தாழ்ந்தவர் உயர்வ(து) என்றால்உயர்ந்தவர் தாழ்வ(து) அல்ல
வீழ்ந்தவர் எழுவ(து) என்றால் நின்றவர்விழுவ(து) அல்ல
ஆழ்ந்தவர் உயிர்ப்ப(து) என்றால் மற்றுளோர்ஆழ்வ(து) அல்ல
வாழ்ந்திட வேண்டும் எல்லா மனிதரும் என்ப தேயாம்.       2

அசுத்தர்கள் சுத்த மானால் மற்றவர்க்(கு)அசுத்தம் என்ன?
பசுத்தவர் சோறு தின்றால் பட்டினி பிறருக்(கு)ஆமோ?
கசிந்தவர் களிப்(பு) அடைந்தால் களித்தவர்அழுவ(து) ஏனோ?
ஒசிந்தது இசைந்து விட்டால் நல்லது ஒடிந்துபோமோ?       3

300. இந்தியக் காங்கிரஸ்

(காங்கிரஸ் பொன்விழாவின்போது பாடியது)

இந்திய மக்களின் உரிமையைக் காப்பது
       இந்தியக் காங்கிரசே
அந்தநம் காங்கிரஸ் ஐம்பது ஆண்டுகள்
       அடைந்தது இன்றோடே.       1

அன்னையின் விடுதலைக்(கு) ஐம்பது ஆண்டுகள்
       அசரா(து) உழைத்ததனால்
பொன்முடி புனைந்(து)இனி புதுப்புது வழிகளில்
       பொலிந்திடும் காங்கிரசே.       2