92நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஏழை எளியவர்கள் யாவர்க்கும்
       இன்பம் கொடுக்கஅவன் பாவிருக்கும்.       2

உழுது தொழில்புரியும் பாட்டாளி
       உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும்;
தொழுதே அடிமைப்படும் துயரமெல்லாம்
       தூரத் தள்ளமனம் உய்குமடா!       3

படித்துப் பழகாத பாமரருக்கும்
       பாடிப் பருகஅதில் சேம மிருக்கும்;
ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை;
       ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமல்ல.       4

காடும் மலையும்அதில் கலைபேசும்;
       கடலும் ஞானமதிர அலைவீசும்;
பாடும் தேசிகவி நாயகத்தின்
       பழமை பாடிடஎன் நாஉவக்கும்.       5

நோய்நொடி யாவையும் விட்டோடி
       நூறு வயதும்சுகக் கட்டோடு
தாய்மொழி வளர்த்தவன் கலிகாணும்
       தனிவரம் தெய்வம் தரவேணும்.       6

49. வ.உ. சிதம்பரம் பிள்ளை

சிதம்பரம் பிள்ளையென்று பெயர்சொன்னால் - அங்கே
       சுதந்தர தீரம்நிற்கும் கண்முன்னால்;
விதம்பல கோடிதுன்பம் அடைந்திடினும் - நாட்டின்
       விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே.       (சிதம்)

அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும் - நல்ல
       ஆற்றல் கொடுக்கும்அவன் சரித்திரமே;
கொடுமை பலசகிக்கும் குணம்வருமே - நாம்
       கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம்.       (சிதம்)