பக்கம் எண் :

931
பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்

  வஞ்சினங் கூறி மதக ளிடந்து
  வெஞ்சின வேங்கை வில்லுட னொளிப்ப
  திக்கடிப் படுத்திச் சக்கரஞ் செல்ல
  எவ்வெவ் மானிலப் பார்த்திவர் பொதுவற
+ தெய்வ மேருவில் சேல்விளை யாட்
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இருவகைப் பிறப்பின்
  முந்நுல் மார்பின் நான்மறை யாளர்
  மாக விசும்பின் வானவர்க் கமைத்த
  யாக வேள்வி யிடந்தொறு மியல
  ஐம்புலங் கடக்கு மருமைசா லறுவகை
  செம்பொருட் சமயஞ் சீருடன் குலவ
  எழுபொழில் கவித்த முழுமதிக் கவிகை
  திருநிலவு சொரிந்திங் கிருநில வரைப்பின்
  வெங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
  விண்பொரு சிகர மாதிர வெண்கோட்
  டெண்பெரு களிறு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ஒன்பது கண்டத்து உயர்குல வேந்தரும்
  அன்புடன் வளங்கி அருந்திறை காட்டி
  யணிதட முடிமே லடிமலர் சூடி
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ஓடரி நெடுங்கண் ஒண்டொடி மகளிர்
  திலத நுதன்மேற் சேவடி வைக்கும்
  உலக முழுவதுடையாரோடும் வீற்றிருந்தருளிய
  ஸ்ரீ கோச்சடைய பன்மரான திரிபுவன
  சக்ரவர்த்திகள் ஸ்ரீ குல சேகர தேவர்க்கு
  யாண்டு மூன்றாவது நாள் 5ள4 நாஞ்சி
  நாட்டு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இதுவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சபைப் பிரகாரத்திலுள்ளது.

இங்குக்காட்டிய சாஸனங்களிரண்டும் சடையன் குலசேகரபாண்டியன் மூவகைத்தமிழையும் நல்ல வண்ணம் ஆதரித்து வந்தனன் என்பதைத் தெளிவாய் விளக்குகின்றன.

அப்பால் கி. பி. 1216 ல் சுந்தரபாண்டியன் மாறவர்மன் அரசாக்ஷி செய்தான். இவன் மஹா வீரன். தோல்வி என்பதே இவனுக்குத் தெரியாது. தமிழிடத்தும் எழுவகை இசையிடத்தும் பேரபிமான முள்ளவனாயிருந்தான். இவன், சோணாட்டை அக்காலத்திலாண்டுகொண்டிருந்த மூன்றாவது இராஜாதி ராஜனைக் காட்டில் ஓட்டிக் கருணையால் மீண்டும் அவனுக்கு அரசளித்தான். அதனால் இவனுக்கு (முதலாவது) சுந்தரபாண்டியன் எனவும், சோணாடு கொண்டு சோளபுரத்து வீராபிஷேகங்கொண்டருளிய சுந்தரபாண்டியன் எனவும், சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் எனவும், பெயர்கள் வழங்கலாயின.

6-வது சாஸனம்.

ஸ்வஸ்தி ஸ்ரீ

பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப
நாமருவிய கலைமடந்தையும் ஜெய மடந்தையும் நலஞ்சிறப்ப
கோளார்ந்த சினப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப