பக்கம் எண் :

35
மிகப்பூர்வ காலத்தைக்காட்டும் சில முக்கிய குறிப்புகள்.

வென்று சாஸ்திரிகள் கண்டுபிடிக்கிறார்கள். இவைகளைக் கொண்டு நாம் சொல்லுகிற முதல் ஊழியின் காலம் அதிகமாகாதென்றே தோன்றுகிறது. இம்மரங்கள் வேறு சில இடங்களிலிருப்பதாக அடியில்வரும் வசனத்தில் காணலாம்.

Dravidian comparative Grammar by Bishop Caldwell, Page 66, Foot-note.

"Huge old specimens of the Baobab, or Adansonia Digitata, an African tree, of which the Hindus do not know even the name, may still be seen in or near various sites of foreign commerce in the extreme south of the Indian peninsula : e. g. in Kottar, near Cape Comorin, and near Tuticorin in Tinnevelly-possibly on the site of the ancient Kolkhi."

"இந்தியாவின் தென்கோடியில், அந்நிய தேசங்களோடு வர்த்தகம் நடத்திவந்த அநேக துறைமுகப் பட்டணங்களிலும் அவைகளுக்குச் சமீபத்திலும், பேயோபாப் அல்லது அடன்ஸோனியா டிஜிற்றாற்றா என்ற ஆப்பிரிக்காக் கண்டத்து மரம், நீண்டு பாரித்துப் பரிமாண்டமாய் வளர்ந்து நிற்பதைக் காணலாம். அவைகள் வெகுகாலத்து மரங்கள். உதாரணமாக, கன்னியாகுமரி முனைக்குச் சமீபமான கோட்டாற்றிலேயும் திருநெல் வேலியைச்சார்ந்த தூத்துக்குடிக்குச் சமீபமாகக் கொற்கையென்ற பழைய நகரிருந்த இடத்திலேயும் இம்மரங்கள் நிற்கின்றன. இவைகளின் பேர்முதலாய் இந்துக்களுக்குத் தெரியவில்லை."

மேலேகூறிய பேயோபாப் என்றமரம் ஆப்பிரிக்காக் கண்டத்து மரமென்றும் அன்னியதேச வியாபார சம்பந்தமான துறைமுகப் பட்டணங்களில் அது காணப்படுகிறதென்றும் அதன் பெயர் இந்துக்களுக்குத் தெரியவில்லையென்றும் சொல்லுகிறார். இம்மரத்தின் உபயோகத்தை அறிந் திருந்த தென்னிந்திய ஜனங்களுக்கு அது நூதனமான மரமல்ல. ஆனால் ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவிலுள்ள பூபாகத்தில் இம்மரம் ஏராளமா யிருந்திருக்க வேண்டுமென்றும், அப்பூபாகம் அழிந்தபின் அதற்குச் சம்பந்தப்பட்டதான பூமிகளில் அங்கங்கே காணப்படுகிறதென்றும் நாம் நினைக்க ஏதுவிருக்கிறது. அம்மரத்தைப்பற்றி,

உவின்ஸ்லோ அகராதி பக்கம் 728.

"பப்பரப்புளி-(also பெருக்கமரம்) A species of large tree, Adonsonia digitata, L" என்றும், வாசுதேவநாயுடு எழுதிய

ஆயுர்வேத பாராவாரம் பக்கம் 676.

"யானைப்புளியமரம், பப்பரப்புளி, பூரிமரம், அடன்ஸோனியா டிஜிடாடா Adonsonia Digitata பேயோபாப் Baobab மங்கி ப்ரெட் டரீ Monkey-bread tree. ஆப்பிரிக்கா தேசத்திலும் இப்போது நமது தேசத்திலும் இந்த மரம் விஸ்தாரமாய்விட்டது. பழத்தின் சதைக்கு ஸங்கோசநி (நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் கீழ் முதலியவற்றை நிறுத்தும்) அந்தரஸ் நிக்தகாரி (உட்கொண்டால் தாதுக்களின் எரிச்சலைச் சாந்தி செய்து அவற்றைத் துவள்விக்கும்) செய்கைகளுண்டு. இதைச் சீதபேதிக்கும் சீதசுரங்களுக்கும் கொடுக்கலாம்."

என்றும் சொல்லியிருப்பதினால் மேலேகூறிய மரம் பப்பரப்புளி என்று அறியலாம். மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் சீழ் முதலியவற்றை நிறுத்தக் கூடியதான சக்தி பப்பரப்புளி (பூத விருக்ஷம்) என்ற மரத்துக்கு இருந்ததினால் சித்தர்கள் அதை உபயோகப்படுத்துகிறதாகச் சொல்லப்படுகிறது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. நீண்ட ஆயுளுள்ள இம்மரம் நீண்ட ஆயுளை விரும்பித் தவஞ்செய்த பெரியோர்களுள்ள லெமூரியாவில் அது பூர்வமாயிருந்திருக்க வேண்டும். லெமூரியா அழிந்துபோன பின்