ஸ, ப, ஸ1 இம்மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து வந்தால் ஹார்மநி இருக்கிறதென்று நமது வித்வான்கள் யாரும் ஒப்புக்கொள்ளுகிறபடியால் அவைகளுள்ள இடைவெளிகளும் இடைவெளிகளாகும் அவை (4/3),(3/2), 2 ஆக இம் மூன்றுமாம். 1. நாம் இனி கவனிக்கவேண்டிய தென்னவென்றால், ஸ என்பதற்கும் க(3) என்பதற்கும் இடையில் சேரும்படியான இடைவெளிகளுள்ள எந்த எந்த ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்கவேண்டியதுதான். அதேமாதிரி க(3) வுக்கும் ப வுக்கும். பவுக்கும் ஸ1 வுக்கும் இடையில் எந்த ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்கவேண்டும். முதலில் ஸ என்பதற்கும் க(3) வுக்கும் இடையில் ரி(1) என்னும் ஸ்வரம் வந்தால் நன்றாய்ச்சேரும். ஏனென்றால் ரி(1) க்கும் ஸ வுக்கும் இடைவெளி (25/24)க(3) வுக்கும் ரி(1) க்கும் இடைவெளி (6/5) காரணம் :- 25/24 வூ 6/5 = 5/4 ரி(1) வூ 6/5 = க(3). அதாவது ரி(1) யைச் சுருதியாக வைத்துக்கொண்டால் க(3) என்பது அந்த சுருதிக்கு ஸாதாரண காந்தாரமாகப் பேசும். பிறது, ரி(3) என்னும் ஸ்வரமும் ஸ வுக்கும் இடையில் வந்தால் இரண்டுடனும் நன்றாய்ச் சேரும். ஏனென்றால் ரி(3) க்கும் ஸ வுக்கும் இடைவெளி 10/9. க(3) வுக்கும் ரி(3) க்கும் இடைவெளி 9/8 இதற்குக் காரணம் :- 10/9 வூ 9/8 = 5/4 ரி (3) வூ 9/8 = க (3). அதாவது ரி(3) யைச் சுருதியாய் வைத்துக்கொண்டால், க(3) அதற்கு ரி(4) ஆகப் பேசும். பிறகு ரி(4), ஸ வுக்கும் க(3) வுக்கும் இடையில் வந்தால் சுகத்தைத்தரும். ஏனென்றால் ரி(4) க்கும் ஸ வுக்கும் இடைவெளி 9/8. க(3) வுக்கும் ரி(4) க்கும் இடைவெளி 10/9 இதற்குக் காரணம் :- 8/9 வூ 10/9 = 5/4 ரி (4) வூ 10/9 = க (3). அதாவது ரி(4) என்பதைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் அதற்கு க(3). ரி(3) ஆய்ப் பேசம். 6/5, 9/8. 10/9 இந்த இடைவெளிகள் மேலே எழுதியிருக்கும் இடைவெளிகளுள் ஒன்றாகும் என்கிறதையும் காண்க. க(2) (அல்லது, சில சிலராகங்களில் வரும் ஷட்சுருதி ரிஷபம்) ஸ வுக்கும் க(3) வுக்கும் நடுவில் வந்தால் சேர்ந்துவரும். க(2) வுக்கும் ஸ வுக்கும் இடைவெளி 6/5. க(3) வுக்கும் க(2) வுக்கும் இடைவெளி 25/24. இதற்குக் காரணம் என்ன வென்றால் :- 6/5 வூ 25/24 = 5/4 க(2) வூ 25/24 = க(3). அதாவது க(2) வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் க(3) அதற்கு ரி(1) ஆய்ப் பேசும். ஆகவே, பின் வரும் ஸ்வர வரிசைகள் சேரும்படியானவை. ஸ ரி(1) க(3) ஸ ரி(3) க(3) ஸ ரி(4) க(3) ஸ [ரி(6) = க(2)] க(3) இதே மாதிரி கணக்கிட்டுப் பார்த்தால். க(3) வுக்கும் ப வுக்கும் இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வரும் என்று பார்ப்போம்.
|