இந்த ஸ்வரத்தொகுதிகள் சேர்ந்து வந்தால் ஹார்மநி உண்டாகும். ஆகையால் ராகமும் உண்டாகும். பிறகு க(2) வையும் ப வையும் எடுத்துக்கொண்டால், இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வரும் என்று பார்ப்போம். இவ்விரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் ம(1) சேர்ந்து வரலாம். ஏனென்றால் ம(1) வுக்கும் க(2) வுக்கும் இடைவெளி (10/9) ஏனென்றால் :- (6/5)*(10/9)=(4/3) க(2)*(10/9) =ம(1). ப வுக்கும் ம(1) இடைவெளி (9/8) . காரணம் :- (4/3)*(9/8)=(3/2) ம(1)*(9/8) = ப. இன்னும், ம(2) என்பதும் இவைகளுக்கு இடையில் வந்தால் ஹார்மநி உண்டாகும். ஏனெனில் க(2) வுக்கும் ம(2) வுக்கும் இடைவெளி (9/8). இதற்குக் காரணம் :- (6/5)*(9/8)=(27/26) க(2)*(9/8) = ம(2). ப வுக்கும் ம(2) வுக்கும் இடைவெளி (10/9). ஏனெனில் :- (27/26)*(10/9)=(3/2) ம(2)*(10/9) = ப. இன்னும் ம(4) என்பதும் இவ்விரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் வரும். ம(4) வுக்கும் க(2) வுக்கும் இடைவெளி (6/5). (6/5)*(6/5)=(26/25) க(2)*(6/5) =ம(4). ப வுக்கும் ம(4) வுக்கும் இடைவெளி (25/24). இதற்குக் காரணம் :- (36/25)*(25/24)=(3/2) ம(4)*(25/24)= ப. ஆகவே; க(2) ம(1) ப க(2) ம(2) ப க(2) ம(4) ப ஆகிய இம்மூன்று ஸ்வரத் தொகுதிகளும் சேர்ந்து வந்தால் சுகத்தைத்தரும். இதிலிருந்து சுரம் அறிந்துகொள்ளவேண்டிய தென்னவென்றால் ஸ வுக்கும் ப வுக்கும் இடையில் ரி(1), ரி(2). ரி(3), ரி(4), க(2), க(3). ம(1). ம(2). ம(3), ம(4) இருக்கின்றனவென்பதும் இவைகளில் சில சில சேர்ந்து சப்தித்தால் ஹார்மநி இருக்கிறதென்பதும் தான். III. பிறகு நாம் கவனிக்கவேண்டிய தென்னவென்றால், ப வுக்கும் ஸ வுக்கும் இடையில் எவ்வளவு ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்க வேண்டியது. ஸ வுக்கும் ப வுக்கும் இடைவெளி, ஸ வுக்கும் ம(1) வுக்கும் உள்ள இடைவெளியே. அதாவது, ப வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் மேல் ஷட்ஜம் அந்தச் சுருதிக்கு மத்தியமமாய்ப் பேசும். எனவே, ஸ வுக்கும் ம(1) வுக்கும் இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வருகின்றனவோ அவற்றிற்கு ஈடாக அத்தனை சுருதிகளும் ப வுக்கும் ஸ வுக்கும் இடையில் வரும் அவை பின் வருமாறு :-
|