பக்கம் எண் :

45

22.

செம்பாலைப்பண் - குரலே குரலாக அதாவது ச-வே ச-வாகஆரம்பித்துப் பாடப்படுவது; இதுவே தீரசங்கராபரணம்.

23.

படுமலைப்பாலைப்பண் - துத்தம் குரலாக அதாவது ரிஷபம்சட்சமமாகக் கிரக மாற்றிப் பாடுவது; இதுவே கரகரப்பிரியா.

24.

செவ்வழிப்பாலைப்பண் - கைக்கிளை குரலாக அதாவதுகாந்தாரம் சட்சமமாக வைத்துக் கிரகசுர மாற்றிச்சொல்வது; இதனைத் தோடி என்பர்.

25.

அரும்பாலைப்பண் - உழை குரலாக அதாவது மத்திமம்சட்சமமாக வைத்துப் பாடுவது; இது கல்யாணி என்று பெயர் பெறும்.

26

கோடிப்பாலைப்பண் - இளி குரலாக அதாவது பஞ்சமம்சட்சமமாக வைத்துப் பாடுவது; இதற்கு அரிகாம்போதி என்று பெயர்.

27

விளரிப்பாலைப்பண் - விளரி குரலாக அதாவது தைவதம்சட்சமமாகப் பாடப்படுவது; இதுவே பைரவியாம்

28.

மேற்செம்பாலைப்பண் - தாரம் குரலாக அதாவது நிஷாதம்சட்சமமாக ஆரம்பித்துப்பாடுவது; இதனை சுத்த தோடி என்பர். இவை ஏழும் ஆயப்பாலையில் வரும் ஏழு பெரும்பாலைகளாம்.

29.

வலிது - மேல் சுரமுடையது; செம்பாலைக்குப் படுமலைப்பாலைவலிது. அதாவது ச-வில் தொடங்கும் செம்பாலைக்கு ரி-யில் தொடங்கும் படுமலைப்பாலை மேல் சுரத்தைக்கொண்டு ஆரம்பிப்பதால் வலிதென்றார். இதைப்போலவே மற்றைப்பாலைகளும் ஒன்று மற்றொன்றினும் வலிதாகும்.

30

பெரும்பண்கள் - நாலுவிதமாம். அவை மருதப்பண், குறிஞ்சிப்பண்,நெய்தற்பண், பாலைப்பண் என்பவைகளாம். அவைகளை மருதயாழ், குறிஞ்சியாழ், நெய்தல்யாழ், பாலையாழ் எனவும் கூறுவர்

31.

மருதயாழ் - குரலே குரலாக ஆரம்பிக்கும்பொழுதுஉண்டாகும் செம்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வெரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடுவது.

32.

குறிஞ்சியாழ் - உழை குரலாக அதாவது மத்திமத்தைசட்சமமாக ஆரம்பித்துப்பாடும் அரும்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடுவது.

33.

நெய்தல்யாழ் - இளி குரலாகப்பாடும் கோடிப்பாலைப்பண்ணில்விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்பப் பாடும் இராகமாம்.

34.

பாலையாழ் - தாரங் குரலாகப் பாடும் மேற்செம்பாலையில்விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப்பாடும் இராகமாம். இவைகள் விளரி, கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்து பாடப் படுவதால் வட்டப்பாலையின் உட்பிரிவாக அடங்கும்.