பக்கம் எண் :

48

63.

வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே - இதனால் முன் முறைப்படிஇரண்டு ஸ்தாயியில் மந்தர ஸ்தாயியாகிய ச, ரி, க, ம என்பது போக ம, ப, த, நி, ச, ரி, க, ம என்ற மத்திய ஸ்தாயியும் போக மீதியாய் நிற்கும் ப, த, நி என்பது ச, ரி, க என்ற தார ஸ்தாயி ஆகிறது. இதனால் தாரஸ்தாயிக்கு முடிந்த சுரம் என்று சொல்வதற்காக வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே என்று சொல்கிறோம்.

64.

ஆதி இசைகள் - நரப்படைவாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத்தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்றாகிய ஆதி இசைகள்.

65.

இசையோர்தல் - சுருதி சேர்த்துச் சுரங்களை ச-ப முறையாய் ஓசைசரியாயிருக்கிற தாவென்று ஆராய்தல்.

66.

இசைநுண்மை - நுட்பமான ஓசை ஒரு ஸ்தாயியிலதொண்ணூற்றாறில் ஒன்றான அல்லது ஒரு முழுச் சுரத்தில் பதினாறில் ஒன்றான ஓசைக்குப் பெயர். இதனால் இசை நுண்மைக்கு மேல் ஓசையின் பேதந் தெரியக்கூடியதும் வாயினால் சொல்லக் கூடியதுமான சுருதிகளில்லையென்று காணப்படுகிறது.

67.

கேள்வி - கேட்கப்படுகிறதினால் கேள்வி என்று பூர்வ தமிழ் மக்கள்வழங்கி வந்தார்கள். ஒரு அலகுள்ள ஓசைக்குப் பெயர். இதனைத் தற்காலத்தார் சுருதி என்பர்.

68.

அலகு - குறிப்பிட்ட ஒரு எண் அல்லது மாத்திரை. இங்கேகுரல் (ச) இரண்டு இராசியில் நாலு அலகாகவும், துத்தம் (ரி) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் உழை (ம) ஒரு இராசியில் இரண்டு அலகாகவும், இளி (ப) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் தாரம் ‘நி) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் வருவதைக் கவனிக்கும் பொழுது இராசிகள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு எண்களாக அல்லது அலகுகளாகக் கணக்கிடப்பட்டிருக்கிற தென்றும் இம்முறையில் பன்னிரண்டு இராசிகளும் இருபத்து நான்கு அலகுகளாக நிற்கின்றனவென்றும் ச-க, ச-ப வாக எவ்வேழு இராசியாக 12 சுரங்களும் வருவதினால் 7x2 = 14 அலகுகளாக ச-ப வருகிறதென்றும் ச-ம, ச-ம வாக 5, 5 இராசிகள் 10 அலகுகளுடையவைகளாயிருக்கின்றனவென்றும் தெளிவாகத் தெரிகிறது. விளரிகைக்கிளையில் மூன்று மூன்று அலகாக வருவதை நாலு, நாலு அலகுகளாக வரும் அதாவது இரண்டு இராசியில் வரும் நாலு அலகில் ஒரு அலகு குறைத்து மூன்று அலகுடன் கமகமாய்ப் பிடிக்கவேண்டும் என்பது தெரிகிறது.

69.பண் - ஏழு சுரங்களுள்ள சம்பூரண இராகம்.
70.பண்ணியம் - ஆறு சுரங்களுள்ள இராகம்.
71.திறம் - ஐந்து சுரங்களுள்ள இராகம்.
72.திறத்திறம் - நாலு சுரங்களுள்ள இராகம். இந்நான்கையும் முறையே,