பக்கம் எண் :

58

35.

படையெடுத் துத்துன் புறுத்திய படியால்
நூல்களு மவற்றி னுண்ணிய வழக்கும்
அருகி மறைந்தன வாதலி னவ்வழி
திருமுறை கண்ட பெருமைச் சோழன்
நீல கண்டயாழ்ப் பாணர் மரபில்

40.


வந்தபெண் வழியா யறிந்து பரப்பினன்.
நந்துத லில்லா வந்த முறையில்
தேவா ரப்பேர் மூவாத் தமிழ்மறை
நசையொழி மேலோ ரிசைதிரு விசைப்பாப்
பண்ணொடு படிக்கு மண்ணின் வழக்கும். 

45.


இசைநூன் முறைதே ரிளங்கோ வடிகள்
சிலப்பதி காரச் செவ்விய மொழியும்,
படிமேற் புலவ ரடியார்க்கு நல்லார்
உரையிற் கூறிய வுயர்மேற் கோளும்,
பரிபா டல்பயில் பண்ணின் முறையும், 

50.


மற்றுள பன்னூ னுட்பமும், ஆய்ந்து;
சிற்பநூல் வல்லார் சிறிதோ ருறுப்புக்
கைப்பெறின் மற்றெலாங் கண்டு கணக்காற்
றேர்தல் போலத் தெய்வ நல்லருள்
காட்டப் பொருளெலாங் கருத்தி லோர்ந்தே; 

55.


தமிழிசை நூல்.
ஆடு முதலாம் பன்னிரு வீட்டில்
குரலிளிக் கொன்றொன்று கொடுத்தைந் தினுக்கும்
இரண்டிரண் டாக வீயிற் பன்னிரண்
டிலநிறை வெய்து; மிதுவே யாழி ற்
பன்னிரு வீட்டிற் பயிலிசை யாகும்; 

60.


அதையிரட் டிக்க விருபத்து நான்கு
கேள்வி வருநிலை மூன்றினுங் கெழுமும்;
ஒத்த வளவிற் பாத்தற் கொவ்வும்;
இணைகிளை நட்புப் பகைமுறைக் கியலும்;
பழந்தமி ழிசைநூற் பாலைக ணான்கிற் 

65.


பன்னீ ரில்லிற் பயில்வ தாயம்;
ஆய மிரட்டிக்கி லாகும் வட்டம்;
வட்ட மிரட்டிக்கில் வருந்திரி கோணம்;
கோண மிரட்டிக்கிற் குலவுஞ் சதுரம்;
அறுநான் கலகுக ளிலையே லொன்றுமூன் 

70.


றைந்தே ழலகி லொன்றா கேள்வி;
கோணஞ் சதுர மிலையேற் கேள்விக்
காலரை முக்காற் கணக்குக் கிடமிலை;
ஆதலி னுள்கி யறிமி னென்றும்;
வட்டப் பாலையில் யாழ்வகை நான்கும்