பக்கம் எண் :

541
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

என்பது, இப்பதினாற் கோவைப் பாலை நிலையினும், பண்ணின்ற நிலையினுமிரட்டித்த குரல் குரலாகிய அரும்பாலையும், இளி குரலாகிய மேற்செம்பாலையும் போல், அல்லாதன ஐந்து பாலையும், உழை குரலாகச் செம்பாலைக்கு உழை பெய்தும், கைக்கிளை குரலாகப் படுமலைக்குக் கைக்கிளை பெய்தும், துத்தங் குரலாகச் செவ்வழிக்குத் துத்தம் பெய்தும், தாரங் குரலாகக் கோடிப் பாலைக்குத் தாரம் பெய்தும், விளரி குரலாக விளரிப் பாலைக்கு விளரி பெய்தும் பாடப்படுமென்றவாறு.

மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கும்பொழுது, ஒவ்வொரு பாலைக்கும் எவ்வேழு நரம்புகள் சொல்லியிருந்தாலும் ஒரு ஆரோகணத்தில் ச, ரி, க, ம, ப, த, நி, ச என்பது போல் முடிவடைவதற்கு ஆரம்பித்த சுரத்தையும் கடைசியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.

5. கோடிப்பாலையில் பிறக்கும் ஏழு பாலைகள்.

ரி நி ரி நி ரி
நம்பர் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் குரல் துத்தம்
நி ரி நி ரி
ரி நி ரி
1 ரி நி
2 ரி நி
3 ரி நி
4 ரி நி
5 ரி நி
6 ரி நி
7 ரி நி

1

உழை குரலாயது .... .... ..... செம்பாலை.

2

இளி குரலாயது .... .... ..... மேற்செம்பாலை.

3

விளரி குரலாயது .... .... ..... விளரிப்பாலை.

4

நி

தாரம் குரலாயது .... .... ..... கோடிப்பாலை.

5

குரலே குரலாயது .... .... ..... அரும்பாலை.

6

ரி

துத்தம் குரலாயது .... .... ..... செவ்வழிப்பாலை.

7

கைக்கிளை குரலாயது .... .... ..... படுமலைப்பாலை.