| 30. | லுன்னிற் புடவி யுயர்தவர் யாவரும் நன்னய முறுவ ரென்றவம் மாண்பே நம்மலர்க் கித்தமிழ் நலமெலாம் பகர்வோ னிருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறெனத் தேவ |
| 35. | ரோதிய மாற்ற முவப்ப நீதியி னிருபொருட் செறிவும் விரவிய செம்மல் தம்பியர் தநயர் தன்னில் லத்துணை தும்புரு வியக்குந் துப்புறு மடந்தையர் மரகத மன்ன மரகத வல்லியுந்
|
| 40. | கனகநேர் சிறப்பின் கனக வல்லியுஞ செவ்விதி னில்லறஞ் செழிப்ப வுறுவோன் பாவு மிராச பத்தியின் முதிர்ந்து ராவு சாஹிபு மேவிய பட்டன் இசையி னுணுக்க மிசைகெழீஇப் பயின்று
|
| 45. | பெருங்காப் பியமென வருங்கலை வாணர சாற்றுகர் ணாமிர்த சாகரந் தன்னை மாதவ னனையசீர் மாதவ ராய மகிபன் பரோடா மன்னவன் பாங்க னவைக்களத் திருந்திங் கரங்கேற்று நிபுணன்
|
| 50. | விருந்தோம் புந்தவ னறுந்தேன் றாரான் பல்வள நிலனுஞ் சொல்வளத் தொழிலு மாட மாளிகை கூடகோ புரமு மமைதரத் தஞ்சையிற் கமைபெறு குணத்து நாற்கவி ராயரை மேற்படப் புரப்பேன்
|
| 55. | ஆபிர காமென மேற்புல மேங்கு மீத லிசையி னிசைந்தோன் கீர்த்தி யாடி யுழுவலிற் பாடிப் படர்தியேற் கழகஞ் சாத்த விழைசெய லணியுங் கொடுப்ப மிலைந்து விடுப்ப வுவந்து
|
| பூத்த கொடியிற் பொலிந்திங் கின்னே வருதி யிறைமக ளென்னவே. ...விறலியாற்றுப்படை. (4) |