பக்கம் எண் :

74

கருணைமிக நிறைபிரிட்டிஷ் மகராஜர் புகழோங்கக் கவின்சேர்சென்னை
வருகவர்னர் ஸர்ஆர்தர் லாலிமஹாப் பிரபுவிவன் மாட்சி யெல்லாம்
பெரிதுணர்ந்து ராவ்சாஹிப் என்றகவு ரவப்பட்டம் பிறங்கத் தந்தா
ரிருநிலத்தில் ராவ்சாஹிப் ஆபிரகாம் பண்டிதமாற் கிணையா ரம்மா.
 

10 

வாதம்வயித் தியம்யோகம் ஞானமிவை களைத்தெளிவாய் மனதிற்றேறுங்
காதலுற்றா யிரத்தெண்ணூற் றெழுபத்தே ழாண்டிலுயர் கருணா நந்தர்
பாததரி சனைசுருளி மலையிலெய்தி யவனருளாற் பலவுந் தேர்ந்து
போதமிக்கீ ராறாண்டுள் வயித்தியத்தா லுலகமெலாம் போற்றப்பெற்றான்.
 

11 

தான்பெற்ற பிள்ளைகளுங் குடும்பத்தார் பிள்ளைகளுந் தமிழாராய்ந்து
தேன்பெற்ற சுவைமலியுஞ் சங்கீத சாத்திரங்க டெளிவி னோர்ந்து
வான்பெற்ற தெள்ளமுதந் துளிப்பவிசை பாடவும்யாழ் வகைகைக்கொண்டு
கான்பெற்ற நலந்திகழ விசைமழைபெய் யவும்புரிந்து களிக்கும்செம்மல்.
 

12 

உத்தியோ கம்புரிய வந்துபல பெருநலங்க ளுஞற்றிச் சீரால
நித்தியா திபனிவனே யெனவாழுந் தஞ்சையிலே நிகழ்சங் கீத
வித்தியா மஹாசனச பையெனுபே ரவையொன்று மேவத் தாபித்
தெத்திசா முகத்திலுந்தன் னிசைவளரும் படிசெயும்பே ரேற்ற
முள்ளோன்.

வேறு

13 

தித்திக்குஞ் செந்தேனோ தேம்பாகோ தெள்ளமுதோ
புத்திக்கு ளிணையாகப் பொருந்துமெனுஞ் சங்கீத
முத்திக்கு வழிகாட்டு முறையனைத்துந் தெளிவித்தே
யெத்திக்குங் கொண்டாடு மேற்றமிகு தோற்றமுளோன்.
 

14 

கண்ணளவுக் கடங்காது கற்பகக்காக் களைமேவி
யுண்ணமுதச் சுவைக்கனிக ளுதவுமிவன் சோலைவள
மெண்ணளவிற் பொருந்துவதோ விசைவேந்தர் கவர்னர் முன்னோர்
நண்ணிமிக மகிழ்பூத்து நாவினிக்கப் புகழ்வாரால்.
 

15 

உண்ணீரோ வெனப்பலரை யொருங்கழைத்தின் னுணவளிப்போன்
மண்ணீரும் விண்ணீரும் வற்றுகினும் வற்றாத
தெண்ணீராங் கிணறுகல்லித் தேகசுகம் பெறவிந்தத்
தண்ணீரே போதுமெனத் தக்கவர்சொல் சொற்பெறுவோன்.
 

16 

இல்லார்க்குப் பொன்னளிப்பா னிரங்கிவந்தார்க் குணவளிப்பான்
பொல்லாநோ யுடையவர்க்குப் பொருந்துமுயர் மருந்தளிப்பான்
பல்லார்க்கும் வேண்டுவன பார்த்துப்பார்த் தினிதளிப்பான்
எல்லார்க்கு முபகாரி மிவன்போல்வா ரிலையுலகில்.
 

17 

உண்டிகொடுப் பவர்தமையு முயிர்கொடுப்போ ரென்பர்பிணி
மிண்டியிறக் குந்திதியின் மெலிபவருக் கருமருந்து
கொண்டுதவி யுயிரையே கொடுக்குமிந்த ஆபிரகாம்
பண்டிதமால் செயனோக்கிற் பகர்வதென்னோ வறிகிலமால்.
 

18 

கருணாநந்தப் பெரியோன் கருணைபுரிந் ததைமனத்தி
லொருநாளு மறவாமை யுலகறியப் பலமருந்து
நிருமாணம் புரிகருணா நிதிவயித்ய சாலைவைத்த
பெருமான்றாய் தந்தைநிகர் பெற்றியன்பல் லுயிர்களுக்கே.