1384. செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர் :- குறண்டி யாரிய வேளர் கொல்லி தனுக்காஞ்சி யியந்தை யாழ்பதங் காளி கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் பாணி நாட்டந் தாணு முல்லை சாதாரி பைரவம் காஞ்சி யெனவிவை பதினாறுஞ் செவ்வழி யாழ்த்திற மென்ப. (இ-ள்.) செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்-குறண்டி, ஆரியவேளர் கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி ஆக 16. 1385. மற்றுந்திறத்தின் பெயர் :- தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி படுமலை யிவைநூற்று மூன்று திறத்தன. (இ-ள்.) மற்றுந் திறத்தின் பெயர்-தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படுமலை இம்மூன்றும் நூற்று மூன்று வகைப்படும். பிங்கலந்தையில் வழங்கும் 103 பண்களின் அட்டவணை. பெரும்பண்ணின் வகை 16. (1) | பாலையாழ் | (6) | தேவதாளி | (11) | சாயவேளர் கொல்லி | (2) | செந்து | (7) | நிருபதுங்கராகம் | (12) | கின்னராகம் | (3) | மண்டலியாழ் | (8) | நாகராகம் | (13) | செவ்வழி | (4) | பௌரி | (9) | குறிஞ்சியாழ் | (14) | மௌசாளி | (5) | மருதயாழ் | (10) | ஆசாரி | (15) | சீராகம் | | | | | (16) | சந்தி |
பாலையாழ்த்திறன் வகை 20.
(1) | தக்கராகம் | (6) | வராடி | (11) | அழுங்கு | (16) | கொல்லிவராடி | (2) | அந்தாளிபாடை | (7) | பெரிய வராடி | (12) | தனாசி | (17) | காந்தாரம் | (3) | அந்தி | (8) | சாயரி | (13) | சோமராகம் | (18) | சிகண்டி | (4) | மன்றல் | (9) | பஞ்சமம் | (14) | மேகராகம் | (19) | தேசாக்கிரி | (5) | நேர்திறம் | (10) | திராடம் | (15) | துக்கராகம் | (20) | சுருதி காந்தாரம் |
மருதயாழ்த்திறன் வகை 16.
(1) | தக்கேசி | (6) | இந்தளம் | (11) | தத்தள பஞ்சமம் | (2) | கொல்லி | (7) | தமிழ் வேளர்கொல்லி | (12) | மாதுங்க ராகம் | (3) | ஆரியகுச்சரி | (8) | காந்தாரம் | (13) | கௌசிகம் | (4) | நாகதொனி | (9) | கூர்ந்த பஞ்சமம் | (14) | சீகாமரம் | (5) | சாதாளி | (10) | பாக்கழி | (15) | சாரல் | | | | | (16) | சாங்கிமம் |
|