மேவுகுறிஞ் சிக்கஞ்சு வியாழகுறிஞ் சிக்காறு பாவுபுகழ் மேகரா கக்குறிஞ்சி பாலிரண்டு தேவுவந்த விந்தளத்தின் செய்திக்கு நான்கினிய தாவில்புகழ்க் காமரத்தின் றன்மைதனக் கிரண்டமைத்தார். | -36 |
காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு வாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற் கேய்ந்தவகை யிரண்டாக்கிச் செவ்வழியொன் றாக்கியிசைக் காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார். | -37 |
கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை சொல்லிலிரண் டாக்கிமிகு தூங்கிசைநேர் பஞ்சமத்திற் கொல்லையினி லொன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாப் புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார். | -38 |
அந்தாளிக் கொன்றாக்கி வாகீச ரருந்தமிழின் முந்தாய பலதமிழுக் கொன்றொன்றா மொழிவித்து நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண் டுந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார். | -39 |
தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங் காண்டகையார் தடுத்தாண்ட வையரரு டுய்யமுறைக் கீண்டிசைசே ரிந்தளத்துக் கிரண்டாக வெடுத்துரைத்து நீண்டதக்க ராகத்துக் கிரண்டாக நிகழ்வித்தார். | -40 |
கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு வேறுவகை மூன்றாக மிகுந்தபழம் பஞ்சுரத்துக் கேறும்வகை யிரண்டாக்கி யின்னிசைதேர் தக்கேசிப் பேறிசையா றாக்கியதிற் காந்தாரம் பிரித்திரண்டாம். | -41 |
ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டா நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின்றுரைக்கிற் குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங் கூறுமிசை யொன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற்றினார். | -42 |
உற்றவிசைக் குறிஞ்சிக்கோ ரிரண்டாக வகுத்தமைத்துப் பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பாற் றுற்றவிசை யிரண்டாக்கித் தூயவிசைப் பஞ்சமத்துக் கற்றவிசை யொன்றாக்கி யரனருளால் விரித்தமைத்தார். | -43 |