| 5. | இசைவடி வாகு மசைவிலாப் பொருளில் தோன்றிப் பன்மொழி யீன்ற வெங்கன்னி ! மிடற்றி லிசையு மிடநாவி லியலும் விழிகை யாடலுங் கெழுமிய வன்னாய் ! வடவரை நீரிற் கிடந்த நாளினு |
| 10. | நிலமாய்த் தென்கட னிலவிய நாளினும் வயங்கு தொன்மை யியங்கப் பெற்றவனை ஊரூர் தோறு மூர்ந்து புகுந்தே நாடுக டோறு நாடி யடைந்தே
|
| 15 | வாக்கே யாண்டும் வழங்கச் செய்தே மாக்கள் பலரையு மக்க ளாக்கினை மூன்று கழகமு மான்ற புலவரும் அன்பு நூலொடு மின்புறக் கண்டனை முன்னை யூழோ பின்னைப் பிறரில் செறிந்திய லுறுப்பைச் சிறிதே யிழந்தனை
|
| 20 | ஆட லிசையெனு நாடரு முறுப்போ மாற்றார் வயப்பட வாற்றா தயர்ந்தனை இசையுறுப் பில்லா ஏழையென் றுன்னை வசையுங் கூறி வழக்கை வீழ்த்தினர் நின்பெருஞ் சேய்பலர் நின்னை மறந்தே
|
| அன்னவர்ப் போற்று மன்னவ ராயினர் இந்தப் போழ்தினிற் செந்தமிழ்ச் செல்வி ! நின்னிசை யோங்கி முன்னிலை பெறவே ஒருவ னெழுந்தே யரும்பண் ணூலொடு
|