ஏகியவத் தவத்தர்பா லிளகுமன துடனே யீறிலான் போலொளிரு மிருடியர்பால் விடுக்க யோகியவ் விராசமுனி யுவந்திவனை நோக்கி யுண்மைநெறி தவறிடா துயர்நிலையைக் கண்டுஞ் சேகரஞ்சேர் குலமுறையிற் குணச்செல்வ னென்றுந் தெய்வவழி பாடுடைய தீரவா னென்றுஞ் சாகரஞ்சூ ழுலகிலிவன் றன்மைபொலிந் தோங்கத் தவாநிலைதேர் மூலிகைச் சரளங்காட் டினரே. * (கெழுமல் - அமைவுறக்கற்று முளைத்தல்.) |