| 14. | மகர முகுக்கும் பட்ரோஜா கொடிசம் பங்கி வளர்மல்லி சிகர குசுமம் மனரசிதந் தேர்பம் பில்மாஸ் மாதுளையும் பகர விலஞ்சி மரையாம்பற் பகரும் நீலோற் பலம்பிசங்கந் தகரக் கரிய குழலார்கள் தங்குஞ் சோலை களிற்சமையும். |
| 15. | காணு மெழுதா வெழுத்ததனிற் கலந்த வனேக பிரிவெழுத்துந் தோணுஞ் செடிபூங் கொடியுருவந் துலங்கு விளிம்பின் பூங்கொடியுந் தாணு மெழுத்தின் வகையறைகள் சமையும் வளயெந் திரசாலை பூணு மாடி பங்களா புகழ்கல் மேஜை பீரோக்கள். |
| 16. | கரும்பொ னழகார் கேட்டமைத்துக் கைதே ரூலிங் பைண்டிங்கும் அரும்பு மாட்பிரஸ் கிளேஸ்ரீம்கள் அலமார் மைக ளமையுருளும் விரும்பு முலகர் கட்கினிதாய் விளங்கு நோடீஸ் புக்பாரங் கருதும் டைப்ஸ்கள் வார்ப்பிடங்கள் காட்சிக் கியலு மதிசயமே. |
| 17. | கால தேய நிகழ்வதனாற் கலந்த வுலகர் தமைவாட்டக் கோல வினையின் தொடர்பு தொட்டுக் கூற்றாய்வந்தநோய்கள்வகை மூலங் காலந் தெரிந்துணர்ந்து முதிருந் தேகங் கூறுணர்ந்து ஞால மதனில் மூலிக்கை நாட்டந் தெரிந்த நயசுகுணன். |