பக்கம் எண் :

872
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

பிரம்ம வீணை என்ற பிரம்ம மேளத்தில் காணப்படும் சுரங்களின் பெயர்.

நம்பர் விக்ருதி சுரங்கள் உண்டாகும் விபரம் 
        ச   அச்சுத சட்சம் 
 1 பிரதிசுத்த ரிஷபம்1 ரி     
 2 சுத்த ரிஷபம்2ரி   
 3 பிரதிசதுர்சுருதி ரிஷபம்3ரி1.பிரதிசுத்த காந்தாரம்
4சதுர்சுருதி ரிஷபம்4ரி2 சுத்த காந்தாரம
5பிரதிசட்சுருதி ரிஷபம்5ரி3 பிரதிசாதாரண காந்தாரம்
6சட்சுருதிரிஷபம்6ரி4 சாதாரண காந்தாரம்
7சதகாந்தார ரிஷபம்7   ரி5 பிரதி அந்தர காந்தாரம்
8   6 அந்தர காந்தாரம்
9சுதமத்திமம்1ம க 7 சுதமத்திம காந்தாரம் 
10சுத்த மத்திமம்2ம    
11அப்பிரதி மத்திமம்3ம    
12பிரதிமத்திமம்4ம    
13சுதபஞ்ச மத்திமம்5ம ப 1 சுத பஞ்சமம் 
14  ப 2 பஞ்சமம்
15பிரதிசுத்த தைவதம்1 த    
16சுத்த தைவதம்2த    
17பிரதிசதுர்சுருதி தைவதம்3த நி  1 பிரதிசுத்த நிஷாதம் 
18சதுர்சுருதி தைவதம்4த நி  2 சுத்த நிஷாதம் 
19பிரதிசட்சுருதி தைவதம்5த நி  3 பிரதிகைசிக நிஷாதம் 
20சட்சுருதி தைவதம்6த நி 4 கைசிக நிஷாதம் 
21சுதரிஷாத தைவதம்7த நி  5 பிரதிகாகலி நிஷாதம் 
22   நி  6 காகலி நிஷாதம் 
23சுதசட்சம்ச நி  7 சுதசட்ச நிஷாதம் 
24நேத சட்சம்ச ச   

இதனை திருநெல்வேலி மணியாச்சி ஜமீன் மானேஜராயிருந்த மகா---ஸ்ரீ வேங்கட சுப்பையரிடமிருந்து அரிகேசவநல்லூர் மகா---ஸ்ரீ முத்தையாபாகவதர் அவர்களால் கிடைக்கப்பெற்றேன்.

இதைப்போலொத்த மற்றும் இரண்டு சுவடிகளும் தஞ்சாவூரிலிருக்கின்றன. இப்புத்தகங்களில் சொல்லப்படும் பிரம்ம மேளத்தின் நாலாயிரத்து அறுநூற்று இருபத்துநான்கு இராகங்களில் ஆயிரத்துச்சொச்சம் இராகங்களுக்கு இலக்ஷண சூத்திரங்கள் சொல்லிவரும் மேளாதி கார லக்ஷணம் என்னும் புத்தகத்தையும் தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மஹாலில் இன்றுங் காணலாம்.