அன்னம் :
உருத்திரங்கண்ணன் வழியில் வந்த உங்கள் பெயரும்
உருத்திரங்கண்ணன்தானோ?
தா. கண்ணன் :
இல்லை. என் பெயர் தாமரைக்கண்ணன்.
அன்னம் :
தாமரைக்கண்ணன்! பெயருக்கும் முகத்துக்கும் சம்பந்தம்
இல்லையே! உருத்திரங்கண்ணன் என்னும் பெயரே பொருத்தமாகத்
தெரிகிறது.
தா. கண்ணன் :
பெண்ணே...
அன்னம் :
என் பெயர்...
தா. கண்ணன் :
அன்னமே, தமிழ்ப்பாவில் பிழை நஞ்சு கலப்பவரைக்
கண்டால் என் முகம் தணலாகச் சீறும்; தமிழ்ப்பாடலை இசையும்
பொருளும்
இயைய உரைப்பவரைக் கண்டால் என் முகம் தாமரையாக
மாறும். உன்னால்
பிழையற்ற முறையில் பட்டினப்பாலையைப் பாட
முடிந்தால் பாடு.
இல்லையேல், திருவாயை மூடு. நல்லது செய்தல் ஆற்றீர்
ஆயினும், அல்லது
செய்தல் ஓம்புமின்
[தாமரைக்கண்ணன் வேகமாகக் கடையிலிருந்து இறங்கி வெளியேறுகிறான்.]
அன்னம் :
(மெல்லிய குரலில்) தாமரைக்கண்ணன்.......பட்டினப்பாலை....
அம்பலம் :
யாருடனம்மா பேசுகிறீர்கள்? அந்தத் தாமரைக்கண்ணன் போய்
ஆறு நொடி ஆயிற்று!
அன்னம்:
(திடுக்கிட்டவளாய்) அம்பலம், தந்தை கடைக்கு வருவதற்குள்,
தாறுமாறாகக் கிடக்கும் நவமணிகளை ஒழுங்குபடுத்தி வை. |