பக்கம் எண் :

காட்சி - 111

அம்பலம் : எவனோ, உருட்டிவிட்டான்? நான் எல்லாவற்றையும் பொறுக்கி,
  வகைப்படுத்தி வைக்க வேண்டும்.

  [அம்பலம் நவமணிகளை வகைப்படுத்தி முன் போல் பிரித்து வைக்கிறான்.
  அன்னம் உட்கார்ந்து பாடுகிறாள்]

அன்னம் : மலையகழ்க்குவனே! கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே!
  வளிமாற்றுவன்!

  [பரவசத்தோடு பாடுகிறாள், அன்னம். அவள் முகம் பதுமமாய் மலர்கிறது]


-திரை-

காட்சி - 2


இடம் : முடிகொண்ட சோழபுரத்து அரண்மனை.

நேரம் : முற்பகல்.

தோன்றுவோர் : இராசராசர், புவனமுழுதுடையாள், பிருமாதிராசர்.

  [அரசர் இராசராசர் சோர்வுடன் உட்கார்ந்திருக்கிறார். அரசி
  புவனமுழுதுடையாள் அறைக்குள் நுழைகிறாள். அவள் அதைக்
  கவனிக்கவில்லை. அரசி அரசனருகே வேறோர் ஆசனத்தில் அமர்கிறாள்.]

புவனமுழுதுடையாள் : மன்னவா!

  [அரசியின் குரல் அரசரின் செவியில் விழவில்லை. அரசி மீண்டும்
  அழைக்கிறாள்.]