பக்கம் எண் :

காட்சி - 19

 லிருந்தே கேட்பேன். அதனால் சொற்கள் சரியாகக் காதில் விழவில்லை.
 மலையழைக்குவன் என்று நினைத்துப் பாடினேன். ஐயா, கோபக்காரரே,
 இந்தப் பாட்டு உன் வீட்டுச் சொத்து என்கிறீரே...இதை விலை கொடுத்து
 வாங்கினீரா...?

தா. கண்ணன் : பெண்ணே!
 

அன்னம் : என் பெயர் அன்னம்.

தா. கண்ணன் : அன்னம். இதைக் கரிகாலன் காலத்தில் பாடிய 
  உருத்திரங்கண்ணனார் என் மூதாதை. அவர் வழியில் வந்த நான்
  பாட்டுக்குச் சொந்தக்காரன். விலை கொடுத்தா வாங்கினீர் என்று  
  கேட்டாய்! பெண்ணே, நன்று கேட்டாய்!

அன்னம் : என் பெயர் அன்னம்...அ...ன்...னம்...

தா. கண்ணன் : பெண் அன்னமே, புலவர்கள், பாட்டை வாங்குவதுமில்லை,
விற்பதுமில்லை. பாட்டைக் கேட்பவர் பரிசு கொடுப்பார். அதைப்
பெறுவார்கள். பரிசுபெற்ற பிறகும் பாடல், அதைப் புனைந்த புலவருக்குத்
தான் சொந்தம்.

அன்னம் : அப்படியானால் அதை யாரும் பாடக் கூடாதா?

தா. கண்ணன் : புலவர் பாடல் பொதுச் சொத்துதான்; ஊர்க் கிணறு போல!
  யார் வேண்டுமானாலும் அதன் நீரைப் பருகித் தாகத்தைத்
  தணித்துக்கொள்ளலாம். ஆனால் அக் கிணற்றை மாசுபடுத்த யாருக்கும்
  உரிமையில்லை. ஊருக்காகக் கிணற்றை வெட்டிய உபகாரி, மற்றவர் அதை
  மாசுபடுத்துவதைக் கண்டு சீறுவதும், சிறு செயல் செய்தவரைக்
  கோறுவதும் முறையே....