திலிருந்து ஒரு சிறு கல்லும் பெயராமல் காப்பேன்! நேரத்தை வீணாக்கமல்
புறப்படுங்கள்!
இராசேந்திரன் :
தாமரைக்கண்ணா! இந்தப் பெண்ணின் பேச்சு என்னைச்
சிலிர்க்கச் செய்கிறது!
இவள் சொன்னபடி செய்வாள் என்ற நம்பிக்கை
எழுகிறது. புறப்படு, பாண்டியனின் பாசறை நோக்கிச்
செல்வோம்.
தா. கண்ணன் :
சென்று வருகிறேன்! அன்னம்.
[தாமரைக்கண்ணனும் இராசேந்திரனும் மண்டபத்திலிருந்து இறங்கி
வேகமாக வெளியேறுகின்றனர்.]
அம்பலம் :
என்னம்மா இது, ஏதோ ஒரு வேகத்திலே இந்தக் கண்ணன்
மண்டபத்தைக் காப்பாற்றுவதாக
வாக்குக் கொடுத்துட்டீங்க! எப்படியம்மா
காப்பீங்க?
அன்னம் :
அம்பலம், பாண்டிய வீரர்களை இந்தப் பாவை தடுத்து
நிறுத்தப்போவது உறுதி! அந்த
அதிசயத்தை நாளை நீயே நேரில்
தெரிந்துகொள். நான் என் தாயாருடன் அடைக்கலம் புகுந்த
கோயிலுக்கு
இப்போதே போகவேண்டும். உடன் வருகிறாயா?
அம்பலம் :
வரேனுங்க! இன்னும் என்ன செய்ய வேண்டுமானாலும்
சொல்லுங்க. செய்யறேன்
அன்னம் :
நன்றி அம்பலம். இப்போது வழி காட்டிச் செல்.
அம்பலம் :
நல்லதுங்க. என் பின்னாலேயே வாங்க.
[அம்பலம் தீப்பந்தத்தை முன்னே நீட்டி வழிகாட்டி நடக்க, அன்னம்
அவன் பின்னே செல்கிறாள்.]
-திரை- |