காட்சி - 15
இடம் :
உறையூர்க் கோயில்
நேரம் :
இரவு
தோன்றுவோர் :
அம்பலம், அர்ச்சகர், அன்னம்,
[உறையூரின் நடுவே உயர்ந்து நிற்கும் கோயிலின் நெடுங்கதவுகள்
மூடியிருக்கின்றன. அம்பலத்துடன்
அங்கே நின்று கதவைத் தட்டுகிறாள்
அன்னம்.]
அன்னம் :
ஐயா, குருக்களய்யா கதவைத் திறங்கள்; சீக்கிரம் திறங்கள்!
[அன்னம் கதவைப் பலமாகத் தட்டுகிறாள். அம்பலமும் தட்டுகிறான்.
சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து
குருக்களின் குரல் ஒலிக்கிறது.]
குருக்கள் :
யாரது?
அன்னம் :
நான்தான், அன்னம். நவமணி வணிகர் தனபதியின் மகள்.
கொஞ்சம் கதவைத் திறங்கள்.
[குருக்கள் தாளை நீக்கும் ஓசை கேட்கிறது. திட்டி வாசல் மட்டும்
திறக்கிறது. குருக்கள்
வெளியே எட்டிப் பார்க்கிறார்]
குருக்கள் :
அன்னம், இந்த நள்ளிரவு வரை எங்கம்மா போனாய்? இருள்
பரவியபோது நீ
வெளியே புறப்பட்டாயே?
அன்னம் :
குருக்களய்யா, நீங்கள் சொன்னது உண்மை. பாண்டிய விரர்கள்,
பழம் பெரும் அரண்மனையின்
அழகிய மாளிகைகளை யெல்லாம்
மண்மேடாக்கி |