பக்கம் எண் :

102வளவன் பரிசு

  விட்டார்கள். பட்டினப்பாலைப் பரிசில் மண்டபம் மட்டும் இன்னும்
  நிற்கிறது. அதை எப்படியும் காப்பாற்றுவதாகச் சபதம் செய்திருக்கிறேன்.
  கோயிலுக்குள்ளே அடைக்கலம் புகுந்த மகளிர்கள் என்ன செய்கிறார்கள்?

குருக்கள் : நள்ளிரவில் என்னம்மா செய்வார்கள்? துக்கத்தை ஓரளவு
  மறந்து தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அன்னம் : ஐயா, கோயிலிருக்கும் சகோதரிகளின் உதவி கிடைத்தால்
  பரிசில் மண்டபத்தைக் காப்பாற்றி விடுவேன். அவர்களை எழுப்பிக்
  கருவறையின் முன் மண்டபத்துக்கு வரவழையுங்கள்! அவர்களிடம் நான்
  பேசப்போகிறேன்!

குருக்கள் : பரிசில் மண்டபம் உறையூரின் தனிச்சிறப்பு! அதைக் காப்பது
  நம் தலையாய கடமை! திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் உன்
  முயற்சிக்குத் துணை செய்யட்டும்; வாம்மா, உள்ளே!

அன்னம் : அம்பலம், நான் கோயிலுக்குள் போகிறேன். இன்னும் இரண்டு
  நாழிகைக்குள் இங்கிருந்து புறப்பட்டுப் பரிசில் மண்டபத்துக்குப்
  போவேன். அதற்குள் எனக்கு நூலேணி வேண்டுமே, கிடைக்குமா?

அம்பலம் : ஆவண வீதியை அழித்து விட்டாங்களே! அதன் இடிபாடுகளில்
  தேடிப் பார்த்தால் நூலேணி கிடைச்சாலும், கிடைக்கலாம். தேடிப்
  பார்க்கிறேனம்மா!

குருக்கள் : அன்னம், கோயிலிலே நூலேணி இருக்கிறது. விமானக்
  கலசத்தைச் சுத்தப்படுத்த மேலேறிச் செல்பவர்களுக்காக உறுதிமிகுந்த,
  உயர்ந்த ரக நூலேணி