பக்கம் எண் :

காட்சி - 15103

  இங்கே இருக்கிறது. உன் முயற்சிக்கு அது பயன்படுமானால் தருகிறேன்.

அன்னம் : நன்றி குருக்களாய்யா! அம்பலம், குருக்களிடமிருந்து
   நூலேணியைப் பெற்றுக்கொண்டு, இங்கேயே இரு.

அம்பலம் : சரியம்மா.

அன்னம் : குருக்களய்யா, உறங்கும் பெண்மணிகளை நானே எழுப்பிக்
  கொள்கிறேன். நீங்கள் நூலேணியை எடுத்து அம்பலத்திடம் கொடுங்கள்.

குருக்கள்: ஆகட்டும், அன்னம். உள்ளே, வா! அம்பலம் நீயும் உள்ளே
   வா!

  [அம்பலமும் அன்னமும் திட்டி வாசல் வழியே உள்ளே நுழைய, குருக்கள்
  அச் சிறிய கதவை மூடித் தாளிடுகிறார்.]
 

-திரை-


காட்சி -16


இடம் : உறையூர்க் கோயிலில் கருவறையின் முன் மண்டபம்.

நேரம் : நள்ளிரவு.

தோன்றுவோர் : அன்னம், உறையூர் மகளிரான பொன்னி, பூங்கொடி,
  காந்திமதி, கமலை, காவேரி முதலியோர்.

  [கருவறையின் முன் மண்டபத்தே உறக்கத்திலிருந்து விழித்த மகளிர்
  திரண்டு நிற்கிறார்கள். தூக்கக் கலக்கம் அகலாமல் கண்ணைக்
  கசக்கியவாறு நிற்பவர் சிலர். ‘என்ன