பக்கம் எண் :

காட்சி - 16105

  களுக்குத் திலகம் போன்ற உருத்திரங்கண்ணனார். கரிகாலனை ஒரு
  பெரும் பாட்டால் சிறப்பித்தார்!

பூங்கொடி : தெரியுமே, எங்களுக்கு! கண்ணனார் பாடிய நூல்
  பட்டினப்பாலை என்பதும் தெரியும்! அதற்கு வளவன் பதினாறு நூறுாயிரம்
  பொன் பரிசு வழங்கியதும் தெரியும்.

கமலை : அவ்வளவுதானா! பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறுகால்
  மண்டபத்தையும் கண்ணனார்க்கே வழங்கிவிட்டான் கரிகாலன் என்பதும்
  தெரியுமே!

காந்திமதி : அந்தப் பரிசில் மண்டபம் அரண்மனைக் கட்டடங்களில் மிக
  அழகானது! உறையூர்க் கட்டடங்களில் மிகவும் உயரமானது. இந்த ஊரின்
  எந்தப் பகுதியில் நின்று பார்த்தாலும் அந்த மண்டபத்தைப் பார்க்கலாம்.

அன்னம் : முடியாது, சகோதரி! பார்க்க முடியாது! நாளை உறையூரின்
  எல்லையில் அல்ல, அரண்மனைக்குள்ளே நின்று நோக்கினாலும் பரிசில்
  மண்டபத்தைப் பார்க்க முடியாது.

காந்திமதி : உன்னால் பார்க்க முடியாதா? ஒருவேளை உனக்குக் கண்
  குருடா?

      [எல்லோரும் இதைக்கேட்டுச் சிரிக்கிறார்கள்]

அன்னம் : நான் குருடியல்ல. என் கண் ஒளி பெற்றது தான்! ஆனால்
  நாளை கண்ணன் மண்டபம் இடிந்து விழும் கோரக்காட்சியைக்
  காண்பதற்குப் பதில் என் கண் குருடாகி விடுவதையே விரும்புகிறேன்.
  கண்ணுக்கு விருந்தாகும் கண்ணன் மண்டபம் தகர்ந்து