பக்கம் எண் :

108வளவன் பரிசு

காவேரி : மங்கையர் நடத்தும் மாண்புமிகு போராட்டத்தில் என் குழந்தை
  கருவிலிருந்தே கலந்துகொண்டான் என்ற பெருமை பெறட்டுமே!
  கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தே தாயம் எய்தினான்! என் குழந்தை தாய்
  வயிற்றிலிருந்தே தமிழ் மண்டபத்துக்காகப் போராடினான் என்னும்
  புகழைப் பெறட்டும்! என்னைத் தடுக்காதே, சகோதரி!

  [காவேரி மேலே நடக்கிறாள். அன்னத்தின் கண்களில் கண்ணீர்
  நிறைகிறது.]

அன்னம் : (கைகூப்பி) தமிழ்த் தாயே! உன் தனயனுக்கு வழங்கப்பட்ட
  புகழ்க் கோயிலை நாங்கள் காப்பாற்றி விடுவோம்! கருவுற்ற காரிகையின்
  வீரமும் தீரமும் கண்டு காலனே கலங்குவான்! இந்தப் பாண்டிய வீரர்கள்
  எம்மாத்திரம்! வெற்றி எமதே! வெற்றி எமதே!

  [அன்னம் முழங்கியவாறு, மங்கையரின் கூட்டத்தோடு கலந்து செல்கிறாள்.]

                         
-திரை-

                       
காட்சி - 17

இடம் : உறையூர் அரண்மனையில் பதினாறு கால் மண்டபம்.

நேரம் : காலை

தோன்றுவோர் : பொன்னி முதலிய உறையூர் மகளிர், அன்னம், பாண்டியப்
  படைவீரர்கள், படைத்தலைவன்.

   [பதினாறு கால் மண்டபத்தை நோக்கிப் பாண்டியப் படைவீரர்கள்
  பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.]