பக்கம் எண் :

காட்சி - 17109

படைவீரன்-1 : அண்ணே, உறையூர் அரண்மனையை அழிக்கும் வேலை
   இன்றோடு முடிந்துவிடுமா?

படைவீரன்-2 : செய்ய முடியாது. மேற்குப் பகுதியில் ஒரு மாளிகையை
   இடிக்க வேண்டும். இதோ நடுவே நிற்கும் மண்டபம் நம்மீது விழாமல்
   எச்சிரிக்கையோடு இடிக்க வேண்டும். எவ்வளவு உயரம்!

   [படைவீரன் - 2 இப்படிச் சொல்லிக் கொண்டே தலையை உயர்த்தி
   மண்டபத்தைப் பார்க்கிறான். மண்டபத்தின் மேற்புறத்தில் அன்னமும்
   உறையூர் அரிவையரும் கூட்டமாக நிற்பதைக் கண்டு அதிசயிக்கிறான்.]

படைவீரன்-2 : அடடே! மண்டபத்தின் மேலே எவ்வளவு கூட்டம்,
   அவ்வளவு பேரும் பெண்கள்!

படைவீரன்-1 : ஆமாம், அழகான பெண்கள்!

படைவீரன்-2 : மூடா, அழகை ரசிக்க இதுவா நேரம்? மொத்தம் ஐம்பது
   அறுபது பெண்கள் இருப்பாங்க போல் தோணுதே!

படைவீரன்-1 : ஐம்பது அறுபதா? சுமார் நூறு பேர் இருப்பாங்கண்ணே!

படைவீரன்-2 : இவ்வளவு பெண்கள் எப்படி மண்டபத்தின்
   மேலேறினாங்க? எதுக்காக ஏறினாங்க? தம்பி, இது எனக்கு நல்லதா
   தோணலே. ஓடு, ஓடு! ஓடிப்போய் நம் படைத்தலைவரைக் கையோடு
   அழைச்சுகிட்டு ஓடிவா!
  
   [படைவீரன் - 1 ஓடுகிறான். அரண்மனைப் பகுதியில் நுழைந்த மற்ற
   வீரர்களும் மண்டபத்தின் மீது மங்கையர் கூட்டத்தைக் கண்டு அங்கே
   வருகின்றனர்.]