பக்கம் எண் :

காட்சி - 17111

  [அன்னம் முன் வந்து பேசுகிறாள்.]

அன்னம் : படிகள் இல்லாவிட்டால் மண்டபத்தின் மேலே ஏறமுடியாதா?
  இதோ இந்த நூலேணி துணையால் மேலேறி வந்தோம்!

  [அன்னம் நூலேணியை எடுத்துக் காட்டிவிட்டுப்பின் அதைத் தளத்தில்
  வைத்துவிடுகிறாள்.]

படைத்தலைவன் : ஏன் மண்டபத்தில் நிற்கிறீர்கள்?
 
அன்னம் : ஐயா படைத்தலைவரே, நாங்கள் இந்த உறையூர்ப் பெண்கள்!
  உங்கள் அரசர் இந்தக் கன்னித் தமிழ் மண்டபத்தை இடிக்க
  ஆணையிட்டுள்ளார். அதைத் தடுக்கவே இங்கே நிற்கிறோம்!
 
படைத்தலைவன் : என்னது? இடிப்பதைத் தடுக்கப் போகிறீர்களா? எப்படி?
  மேலே கல், கத்தி, கம்பு-இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? இடிக்கவரும்
  எங்கள் மீது அவற்றை எறியப் போகிறீர்களா?

  [படைத்தலவர் கேட்டதும் சூழநின்ற பாண்டிய வீரர்களில் ஒருவன் கல்லும்

   கம்பும் போடப் போறாங்க. விலகி நில்லுங்கடா என்று கூற வீரர்கள் சற்று
  விலகி நிற்கிறார்கள்.]


அன்னம் : வீராதி வீரர்களே, விலகிப்போக வேண்டாம்! நாங்கள் கல்லும்
  கத்தியும் எறிவோம் என்று பயப்படாதீர்கள்.

படைத்தலைவன் : பாண்டிய வீரர் கல்லுக்கும் கத்திக்கும்
  பயப்படமாட்டார்கள்! நீங்கள் பத்துக் கல்லை எறி