மாசற்ற மங்கையர்களை, கற்புக்கடம்பூண்ட காரிகையரை, தெய்வமாகச்
சீலர்கள் போற்றும்
மாதர்களைக் கொன்ற பழியைச் சுந்தர பாண்டியர்க்குப்
பெற்றுத் தாருங்கள்! தமிழக வரலாற்றில்
தாய்க்குலத்தை மாய்த்த
மன்னர்கள் இல்லை! சுந்தர பாண்டியருக்கு அந்தப் பழி படிந்த
பட்டத்தைப்
பெற்றுத் தாருங்கள்!
படைவீரன்-2 :
தலைவரே, இந்த மண்டபத்திலிருந்து இவங்க கீழே
குதிப்பாங்களா? சும்மா
கதை விடறாங்க. இந்த உயரமான
மண்டபத்திலிருந்து கீழே குதிப்பதை நினைச்சாலே என் மனசு
நடுங்குதே!
இவங்க எப்படிக் கீழே குதிப்பாங்க?
அன்னம் :
நடுங்கும் வீரேன! உனக்குப் பயமாக இருக்கலாம்! எனக்குப்
பயமில்லை! என்னுடன்
நிற்கும் என் தோழியர்க்குப் பயமில்லை. கண்ணன்
மண்டபத்தைக் காக்க உயிரை அர்ப்பணிக்கும்
முடிவோடுதான் இங்கே
வந்திருக்கிறோம். சகோதரிகளே நான் சொல்வது சரிதானே!
பலர் :
சரி! சரி!
அன்னம் :
கேட்டீர்களா வீரர்களே! வேண்டுமானால் இவர்கள் சொல்வதைச்
சோதித்தும்
பார்த்துக் கொள்ளுங்கள். கடப்பாரையினால் இந்த
மண்டபத்தின் தரையிலேயே சும்மா தட்டிப்பாருங்கள்.
தட்டுக்கு ஒருவர்
வீதம் நாங்கள் கீழே குதிப்பதைக் காணலம்.
படைத்தலைவர் :
அதையும் பார்த்துவிடுகிறேன். (ஒரு வீரனைப்பார்த்து)
ஏய், கடப்பாரையால்
கட்டடத்தைக் தாக்கு! |