பக்கம் எண் :

காட்சி - 17115

படைத்தலைவன் : நிறுத்து! கடப்பாரையால் கட்டடத்தைத் தாக்காதே!
  வீரர்களே, மடமடவென்று இந்த மண்டபத்தில் ஏறுங்கள். ஆளுக்கு
  ஒருவராய் இந்தப் பெண்களைத் தோளிலே தூக்கிக் கொண்டு
  இறங்குங்கள்!

       [வீரர்கள் சிலர் மண்டபத்தை நெருங்க முயல்கிறார்கள்.]

அன்னம் : (உரத்த குரலில்) நில்லுங்கள்!
 
       [வீரர்கள் மேலே செல்லாமல் நிற்கிறார்கள்]

அன்னம் : மண்டபத்தின் மீது ஏறுவதற்கு யாராவது முயன்றாலும்,
  இங்குள்ள பெண்கள் ஒவ்வொருவராய்க் கீழே குதித்து உயிர் விடுவார்கள்!
  காவேரி, தயாராய் இரு! இந்த மண்டபத்தில் யாராவது ஏற முயன்றால்,
  இந்த மண்டபத்தில் யாராவது கால் வைத்தால். உடனே கீழே குதித்துவிடு!

காவேரி : அப்படியே செய்கிறேன்!

அன்னம் : மற்றவர்கள் காவேரியைத் தொடர்ந்து கீழே குதியுங்கள்.

பலர் : குதிக்கிறோம்!

படைத்தலைவன் : நில்லுங்கள் வீரர்களே! இதென்ன தொல்லை! இந்தப்
  பெண்கள் சரியான பேய்களாயிருக்கிறார்களே! என்ன சொல்வது? தளபதி
  காங்கேயன் அரசரைப் பார்த்து வருவதாக நேற்றே சென்றார்! இன்னும்
  வரவில்லை. உம்... (யோசிக்கிறார்) வீரர்களே. அரண்மனைப் பகுதியில்
  இந்த மண்டபத்தைத்தவிர இன்னும் இடிக்காத மாளிகை
  ஒன்றிருக்கிறதல்லவா?