பக்கம் எண் :

116வளவன் பரிசு

படைவீரன்-2 : ஆமாங்க! மேற்பகுதியில் ஒரு மாளிகை இருக்குதுங்க.
  படைத்தலைவன் : நீ, மற்றவர்களுடன் சென்று அந்த மாளிகையை
  இடித்துத்தள்ளு. பிறகு இந்த மண்டபத்தை இடிப்போம். அதற்குள் தளபதி
  காங்கேயன் வந்துவிடக் கூடும்.

படைவீரன்-2 : சரிங்க! (வீரர்களை நோக்கி) உம்...என்பின்னே வாங்க...
  தலைவர் குறிப்பிட்ட மாளிகையை இடிப்போம்.

  [படைவீரன் - 2 முன் செல்ல மற்ற வீரர்கள் அவன் பின்னே
  செல்கிறார்கள். படைத் தலைவன் அன்னத்தை ஒரு முறை ஏறிட்டுப்
  பார்த்து விட்டு, அங்கிருந்து அகல்கிறான்.]

                          
-திரை-

                        
காட்சி - 18

இடம் : பாண்டியனின் பாசறை.

நேரம் : நண்பகல்.

தோன்றுவோர் : தாமரைக்கண்ணன், இராசேந்திரன், சுந்தரபாண்டியர்,
  காங்கேயன், மழவர் மாணிக்கம், காரணை விழுப்பரையர், பாண்டியப்
  படைவீர்கள்.

  [பாண்டியன் பாசறைக்கு முன்னே வீரர்கள் காவலாக நிற்கிறார்கள்.
  அருகே சற்று ஒதுங்கி இராசேந்திரனும் தாமரைக்கண்ணனும்
  நிற்கிறார்கள்.]