பக்கம் எண் :

காட்சி - 18117

இராசேந்திரன் : பாண்டியரைக் கண்டு பேசினால் பலன் கிடைக்கும் என்று
  நம்பினேன். இந்தச் சேவகர்கள் நம்மை அனுமதிக்க மறுக்கிறார்களே!
  நண்பகலாகி விட்டது! ஞாயிறு மறையும்முன் வருவதாக உன்
  அன்னத்திடம் சொன்னோமே!

தா. கண்ணன் : ஆமாம்! மீண்டும் ஒருமுறை சேவகரிடம் கேட்டுப்
  பார்ப்போம்.

  [தாமரைக்கண்ணன், சேவகரை நெருங்கிச் செல்கிறான். இராசேந்திரனும்
  உடன் செல்கிறான்.]

தா. கண்ணன் : ஐயா சேவகரே. காலையிலிருந்து உங்கள் அரசரைப்

   பார்க்க வேண்டும், உள்ளே அனுப்புங்கள் என்று எத்தனை முறை
  வேண்டிவிட்டோம். இன்னும் உங்கள் மனம் இளகவில்லையா?

சேகவன்-1 : உங்களுக்கு நானும் எத்தனை முறை முடியாது, முடியாது,
  யாரையும் அரசர் இருக்கும் கூடாரத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று
  சொல்லிவிட்டேன். போய்த் தொலையாமல் என் உயிரை எடுக்கிறீர்களே!

இராசேந்திரன் : எங்களை உள்ளே அனுப்பாவிட்டாலும் பாதகமில்லை.
  புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் வழிவந்த ஒருவன் அரசரைக்
  காண்பதற்காக வாயிலில் காத்திருக்கிறான் என்னும் செய்தியையாவது
  உங்கள் மன்னரிடம் சொல்லுங்களேன்.

சேகவன்-1 : தேவையில்லாமல் அரசரின் முன்னே போய் நின்று,
  முக்கியமில்லாத செய்தியைச் சொன்னால் அது அரசரைத்
  தொல்லைப்படுத்தியதாகும். அப்புறம் என்