பாடு ஆபத்தாகும். தெரிகிறதா? இனியும் தொல்லைப் படுத்தாமல் விலகிச்
செல்லுங்கள்.
தா. கண்ணன் :
பாண்டியரைப் பார்க்கத்தான், அனுமதிக்கவில்லை.
படைத்தலைவரையாவது
பார்க்கலாமா?
சேவகன்-1 :
இரு நாழிகைக்கு முன்பு இந்தக் கூடாரத்தில் இருவர்
சென்றதைப் பார்க்கவில்லையா?
அவர்கள் தான் படைத்தலைவர்கள்!
ஒருவர் காங்கேயர்! மற்றவர் மழவர் மாணிக்கம்! அவர்களும்
அரசருடன்
உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களிடமும் உங்களை
அழைத்துச் செல்ல
முடியாது.
[கூடாரத்திலிருந்து சேவகன் - 2 வருகிறான்.]
சேவகன்-2 :
வேந்தர் வெம்மை பொறுக்க முடியாது வேதனையடைகிறார்.
அதனால் அவர் படைத்தலைவர்களுடனும்
அவைக்களப் புலவருடனம்
அருகேயுள்ள சோலைக்குப் போகிறார். நான் போய்த் தேர் தயார்
செய்யவேண்டும்.
விழிப்பாயிரு!
சேவகன் -1 :
ஆகட்டும்.
[சேவகன்-2 அங்கிருந்து செல்கிறான்.]
இராசேந்திரன் :
(மெல்லிய குரலில்) தாமரைக்கண்ணா, இன்னும் சிறிது
நேரத்தில் அரசர்
இந்த வழியே வருவார் எனத் தெரிகிறது. அந்த நேரத்தில்
ஏதாவது சொல்லி அவர் கவனத்தைக்
கவர்ந்துவிடு.
தா. கண்ணன் :
(மெல்லிய குரலில்) கவனத்தைக் கவரும்படியா? (யோசித்து)
ஆ! நல்ல யோசனை!
அரசர் என்னைக் கவனித்தே ஆகவேண்டும்!
என்னோடு பேசாமல் அவரால் நகரமுடியாது! |