[சுந்தரபாண்டியர் முன்னேவர, பின்னேகாரணை விழுப்பரையரும்,
காங்கேயரும், மழவர் மாணிக்கமும்
வருகிறன்றனர்.]
சேகவன் -1 :
அரசர் வந்துவிட்டார்! (தாமரைக் கண்ணனிடம்) விலகி
நில்லுங்கள்! அரசர்
வாழ்க!
தா. கண்ணன் :
(உரத்த குரலில்) பாண்டிய குலத்துரோகி சுந்தரபாண்டியர்
வீழ்க!
இராசேந்திரன் :
வீழ்க! வீழ்க!
சேவகன்-1 :
ஆ! என்ன துணிவு! உன் நாவை அறுக்கிறேன்.
[சேவகன் வாளையுருவித் தாமரைக்கண்ணன் பக்கம் திருப்ப,
சுந்தரபாண்டியர் அவனைத் தடுக்கிறார்.]
சு. பாண்டியர்
: சேவக, நில். (எதிரே நிற்கும் தாமரைக் கண்ணனையும்
இராசேந்திரனையும்
பார்த்து) வீழ்க, வீழ்க என முழங்கியது நீங்கள்தானே?
தா. கண்ணன் :
ஆமாம்.
சு. பாண்டியர் :
நீங்கள் சோழ நாட்டார் என்பது தெரிகிறது. தோற்ற
நாட்டினர் வென்றவர்களை
வீழ்க எனத் தூற்றுவது இயல்பு. அதனால்
நான் வியப்படையவில்லை. தூற்றியபோது பாண்டிய குலத்தைப்
பற்றி
ஏதோ இணைத்துப் பேசினாயே?
தா. கண்ணன் :
பேசினேன். நீங்கள் பாண்டிய குலத்துக்குத் துரோகம்
செய்தவர் என்று ஏசினேன்.
வானளாவப் பறக்கும் மீனக்கொடிக்கு ஊனம்
உண்டாக்கியவர் நீங்கள் என்று உரைத்தேன். பல்லாயிரம்
ஆண்டுகளாகப்
பாண்டியர்கள் சேர்த்த புகழை ஒரு |