அதனால் அந்தத் தமிழ்க்கோயில் இன்று இடிந்து விழப்போகிறது....
கா. விழுப்பரையர் :
ஆ! பட்டினப்பாலை மண்டபம் இடிந்து விட்டதா?
தா. கண்ணன் :
இதுவரை அழியவில்லை. ஆனால் சுந்தர பாண்டியர்
உடனே தன் வீரர்களுக்கு
அதைக் காக்குமாறு கட்டளையிடாவிட்டால்,
இன்று அழிந்துவிடும்.
சு. பாண்டியர் :
பாண்டியர் என்போர் பைந்தமிழ்க் காவலர். அந்தக்
காவலன், ஒரு பாவலனின்
பரிசில் மண்டபத்தை அழிப்பது அவமானம்!
மீனக்கொடிக்கு ஊனம்! பாண்டிய குலத்துக்குத்
துரோகம்! இப்போதே,
அதை நிறுத்துகிறேன். (தாமரைக்கண்ணனை நோக்கி) கண்ணன்
மண்டபத்தைக்
காக்க இவ்வளவு பாடுபடும் நீ யாரப்பா?
இராசேந்திரன் :
நான் சொல்கிறேன்! இவன் தாமரைக் கண்ணன்!
தண்டமிழ்ப் புலவன்!
கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் மரபிலே
வந்தவன்! கண்ணன் மண்டபம் இப்போது இவனது சொத்து.
சு. பாண்டியர் :
பட்டினப்பாலைக் கவிஞனின் வழியிலே வந்தவனா?
அதனால்தான் அரசரின் எதிர்நின்று
அச்சமற்றுப் பேசும்
ஆண்மையிருக்கிறது (இராசேந்திரனைப் பார்த்து) நீயாரப்பா? என்
படைத்தலைவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து
வைத்திருக்கிறாயே!
தா. கண்ணன் :
நான் சொல்கிறேன்! இவர்தான் கண்ணன் மண்டபத்தைக்
காக்க வழி காட்டியவர்!
பாண்டியப் |