பக்கம் எண் :

காட்சி - 18125

கா. விழுப்பரையர் : அரசே நானும் உடன் வருகிறேன்!

காங்கேயர் : நானும் உடன் வருகிறேன்!
  
சு. பாண்டியர் : மழவர் மாணிக்கம். உன் தேர் இத்தனை பேருக்கும்
   இடமளிக்குமா? தேரின் பரிகள் இவ்வளவு பாரத்தை இழுத்துச் செல்லுமா?

ம. மாணிக்கம் : இரண்டும் முடியும்! எல்லோரும் வாருங்கள்!

   [மழவர் மாணிக்கம் முன்னே ஓடுகிறான். சுந்தர பாண்டியரும்
   காங்கேயரும் விழுப்பரையரும் அவன் சென்ற வழியில் செல்ல தாமரைக்
   கண்ணனும் இராசேந்திரனும் தாங்கா மகிழ்ச்சியில் ஒருவரையொருவர்
   தழுவிக் கொண்டபின், மன்னர் பின்னே செல்கின்றனர்.]

                          
 -திரை-

                       
காட்சி - 19

இடம் : உறையூர் அரண்மனையில் பதினாறுகால் மண்டபம்.

நேரம் : பிற்பகல்.

தோன்றுவோர் : அன்னம், உறையூர் மகளிர் பலர், படை வீரர்கள்,
   படைத்தலைவன், ஊர்மக்கள், அம்பலம், சுந்தரபாண்டியர், காங்கேயன்,
   மழவர் மாணிக்கம், காரணை விழுப்பரையர்.

   [கண்ணன் மண்டபத்தின் மீது அன்னம் முதலான பெண்கள்
   நிற்கிறார்கள். வீரர்கள்