சிலர் மண்டபத்தின் அருகே நிற்கிறார்கள். உறையூர்ப் பெண்களின்
அறப்போரைக்
கேள்வியுற்று ஆடவரும் பெண்டிருமாகப் பெருங்கூட்டம்
அங்கே கூடியிருக்கிறது.]
படைத்தலைவன் :
எஞ்சிய மாளிகையை இடித்து விட்டீர்களா?
படைவீரன் :
எப்போதோ முடித்துவிட்டோம்! இனி இந்த மண்டபத்தைத்தான் இடிக்கவேணும்.
இதைத் தவிர உறையூரிலே வேறு கட்டடங்களே இல்லைங்க.
படைத்தலைவன் :
இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே எப்படிக்கூடியது?
படைவீரன் -2 :
தெரியலைங்க!
படைவீரன்-3 :
எனக்குத் தெரியும்! பாடுகிறான்)
கண்ணன் மண்டபம் காத்திட வேண்டிக்
காரி கைப்படை போர் தொடுத்தது!
முன்னம் அறியா விந்தைப் போரினைக்
கண்ணால் காண வந்தது கூட்டம்!
காளையர் வந்துளர்! கன்னியர் வந்துளர்!
சீலர்கள் வந்துளர்! சிறுவரும் வந்துளர்!
படைத்தலைவன் :
மூடுடா, வாயை! நினைத்தால் கவிதை பாடுகிறாய்!
கூட்டத்தில் ஒருவர் : கண்ணன் மண்டபத்தின் நிழலில் நின்றால்
பட்டமரத்துக்குக்கூடப்
பாட்டு வருமே! இந்தப் பாண்டிய வீரனுக்குப்
பாட்டு வந்ததில் என்ன விந்தை. |