சோழ நாட்டை உன் தந்தையார்க்குத் திருப்பிக் கொடுக்கப் போகிறேன்.
வீராபிடேகம்
முடிந்ததும் நான் பொன்னமராவதி சென்று அங்குத்
தங்கியிருப்பேன். நீ போசளநாடு சென்று,
இராசராசரை
அழைத்துக்கொண்டு அங்கு வா! சோழநாட்டை உன் முன்னிலையில்
சோழ அரசர்க்குத்
தருகிறேன்.
இராசேந்திரன் :
(குரல் தழதழக்க) நன்றி, நன்றி நன்றி!
சு. பாண்டியர் :
தாமரைக்கண்ணா, நீயும் அப்போது இளவரசனுடன் வா!
உன் அன்னத்தை அதற்குள்
மணந்து, மனைவியாக்கி உடன் அழைத்து
வா!
தா. கண்ணன் :
அப்படியே அரசே!
சு. பாண்டியர் :
விழுப்பரையரே, இருள் சூழ்வதற்கு முன் இந்தக் கண்ணன்
மண்டபத்தைப் பார்த்து
வருவோம். வாருங்கள்.
[சுந்தரபாண்டியன் முன்செல்ல, விழுப்பரையரும், காங்கேயரும், மழவர்
மாணிக்கமும் பின் தொடர்ந்து
செல்கிறார்கள்.]
-திரை-
காட்சி - 20
இடம் :
உறையூர் எல்லையில் உள்ள சோலை.
நேரம் :
காலை.
தோன்றுவோர் :
இராசேந்திரன், தாமரைக்கண்ணன், தனபதி, அம்பலம்,
அன்னம்.
[இளவரசன் இராசேந்திரன் குதிரையுடன் விடை பெற்றுச்செல்ல நிற்கிறான்.
தாமரைக் கண்ணனும்
அன்னமும் பிரிவுத்துயரை யுணர்ந்து
கலங்குகிறார்கள்.] |