இராசேந்திரன் :
கலங்காதே தாமரைக்கண்ணா! நான் இப்போது பிரிந்து
சென்றாலும், மிக விரைவில் உன்னைச் சந்திப்பேன். நேரே போசள
நாட்டுக்குப் போகிறேன்.
தந்தையுடன் திரும்பி வந்ததும். செய்தி
அனுப்புகிறேன். பொன்னமராவதி போகும்போது நீயும்
வருகிறாய்,
மறந்துவிடாதே!
தா. கண்ணன் :
இளவரசே, உங்களால் கண்ணன் மண்டபம் தப்பியது!
இப்போது இருக்கும் மண்டபம்
கரிகாற்சோழர் கொடுத்ததல்ல; இளவரசர்
இராசேந்திரர் ஈந்தது.
இராசேந்திரன் :
தவறு தாமரைக்கண்ணா! அன்னத்தின் துணையும்
துணிவும் இல்லையென்றால் நாம்
பாண்டியரைக் கண்டு மீண்டு
வருவதற்குமுன் மண்டபம் இடிந்து சரிந்திருக்கும். உண்மையில் கண்ணன்
மண்டபத்தை இனி அன்னம் மண்டபம் என்று அழைப்பதே சரி.
போசளத்திலிருந்து நான் திரும்புவதற்குள்
உன் திருமணத்தை முடித்து
விடாதே!
[இவ்வாறு சொல்லும்போதே அம்பலத்துடன் அங்கு வருகிறார் தனபதி]
தனபதி :
நடக்காது! தாமரைக்கண்ணன் அன்னத்தை மணப்பது நடக்காது!
இராசேந்திரன் :
இவர்....
அன்னம் :
என் தந்தையார், இளவரசே!
தனபதி :
ஓ, இளவரசரா! வணக்கம் இளவரசே!
இராசேந்திரன்
: அது இருக்கட்டும். கண்ணன்-அன்னம் கடிமணம் நடவாது
என்று கூறினீர்களே,
ஏன்? |