அம்பலம் :
நான் சொல்றேனுங்க! தாமரைக்கண்ணன் தம்மைப் பாடணும்னு
கொள்ளை ஆசை
இவருக்கு; புலவரோ பாட மறுக்கிறாருங்க!
அன்னம் :
புலவர் பாடும் புகழ்க்குணம் என் தந்தையாரிடம் இல்லை.
அதனால் என் காதலர்
பாட மறுத்தார்.
தனபதி :
என்னைப் பாடினால் என் பெண்ணைத் தருகிறேன். என்னைப்
பாடாமல் திருமணம் நடக்காது.
தா. கண்ணன் :
வணிகரே, உம்மைப் பாடினால், அன்னத்தை எனக்குப்
பரிசளிக்கிறீர்களா?
தனபதி :
ஆமாம்! ஒரு பாட்டுப்பாடு போதும்; உடனே என் மகள்
உனக்குரியவளாகி விடுவாள்.
தா. கண்ணன் :
ஒரு பாடலென்ன! உம்மீது ஒரு நூறு பாடல் பாடுகிறேன்.
தனபதி :
ஆ! என்மீது நூறு பாடல் பாடுகிறீர்களா? இதுவன்றோ பேறு!
பெறற்கரும் பேறு!
அன்னம் :
தாமரைக்கண்ணா, காதலுக்காகக் கொள்கையைக் கைவிடலாமா?
புலவர் பாடும்
புகழுடையாரை யன்றி வெறும் பொருளுடையாரைப்
பாடமாட்டேன் என்றீர்களே! என்னை மணக்கும்
சுயநலத்தால், அதை
மாற்றிக் கொண்டீர்களா? பொன்னுக்குப் பாடாத புலவர் பெண்ணுக்காய்ப்
பாடுவது இழிவு!
தா. கண்ணன் :
அன்னம், நான் சுயநலத்துக்காகக் பாடவில்லை. உங்கள்
தந்தையார் இப்போது
புலவர் பாடும் புகழுடையவராகிவிட்டார். கண்ணன்
பரம்பரைக்குச் சொந்தமான
தமிழ்மண்டபத்தைக் காத்த |