பக்கம் எண் :

காட்சி - 221

இராசராசர் : எது அரசி?

புவன : புனலும் கனலும் ஒருகலத் திருப்பது.

இராசராசர் : புரியவில்லையே!

புவன : அமைதியைப்பற்றிப் பேசியபோது உங்கள் அகமும் முகமும்   
  புனலாய்க் குளிர்ந்தன! அமரைப் பற்றிப் பேசியபோதோ அவை கனலாய்த்
  தகித்தன! உங்கள் உடற்கலத்தில் இப்புனலும் கனலும் ஒன்றாய் இருப்பது
  அதிசயந்தானே!

இராசராசர் : (சிரித்து) தேவி! அரச வாழ்க்கை இத்தகைய முரணுடையதே!

புவன : முரணும் ஓர் அழகு என்றே இலக்கணம் இயம்பும்!

இராசராசர் : தேவி, போரைப்பற்றிப் பேசிக் குருதியைக் கொதிப்புறச்
  செய்துகொண்டேன். அதைச்சற்றே தணிக்க யாழ்மீட்டி இசை மழை
  பொழிகிறாயா?

புவன : அப்படியே சுவாமி.

  [புவன முழுதுடையாள் யாழ் இசைக்க அந்த இசையில் ஈடுபட்டு இன்பந்
  துய்க்கிறார் இராசராசர்.]

                        
-திரை-