மலை யழைக்குவனே கடல் தூக்குவனே
வான் வீழ்த்துவனே வலிமாற்றுவனே
[அன்னத்தின் பாடல் எண்ணத்தைத் தாக்க, எரியும்
விழியோடு
எழுந்து அவளருகே விரைகிறான். அவன் வந்ததைக்
கடைக்
கண்ணால் கவனித்த அன்னம் இன்னும்
உரக்கப்பண்ணிசைக்கிறாள்.]
அன்னம்:
மலையகழ்க் குவனே! கடல்தூர்க் குவனே!
வான்வீழ்க் குவனே! வளிமாற்று வனெனத்
தான் முன்னிய துறை போகலின்
பல்லொளியர் பணிவொடுங்கத்
தொல்லருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி...
அரிமா வன்ன அணங்குடைத் துப்பின்...
திருமா வளவன்.....
[அன்னம் பாடப்பாட, வியப்பு விந்தியமாய் வளர, மகிழ்ச்சி மாக்கடலாய்ப்
பெருகத் தாமரைக்கண்ணன் உணர்ச்சி மயமாகிறான்]
தா. கண்ணன் :
பெண்ணே.....
அன்னம் :
என் பெயர்......
தா. கண்ணன் :
உன் பெயர் அன்னம், உன்னுரு சொன்னம்!
உன் குரல் குயிலே! உன்விழி கயலே!
அன்னம் :
புலவர் புதல்வர் புதுப்பா புனைகிறாரோ!
தா. கண்ணன் :
வணிகன் பெற்ற வனப்பின் வானமே!
வனிதையர் அரசி! வாழ்கநின் குரலே!
அன்னம் :
முடிந்ததா, கவிதை? |