என்னைப் பார்ப்பதற்காகக் கடை வீதியில் அலைய வேண்டாம் கண்ணா!
நாளை மாலை இந்தச்
சோலையில் இதே இடத்தில் என்னைச்
சந்திக்கலாம்,
தா. கண்ணன் :
இருள் சூழ்ந்துவிட்டதே ! உன் வீடுவரை நான் துணையாக
வரட்டுமா!
அன்னம் :
வேண்டாம் கண்ணா! தனியே செல்லும்பெண்ணுக்குத் தீது
செய்யும் அளவு உறையூர் தாழ்ந்து
விடவில்லை. நான் சென்று
வருகிறேன்.
[தாமரைக்கண்ணன் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, அன்னம்
புன்னகை யுதிர்த்தபின் மென்னடை
நடந்து செல்கிறாள்.]
-திரை-
காட்சி - 4
காலம் :
காலை
இடம் : மதுரை பாண்டியனின் ஆலோசனை மண்டபம்.
தோன்றுவோர் :
சுந்தரபாண்டியர், குருகுலத் தரையன், காங்கேயன், மழவர்
மாணிக்கம்.
[சுந்தரபாண்டியர் நடு நாயகமான ஆசனத்தில் கம்பீரமாக
வீற்றிருக்கிறார். இருபுறத்தும் உள்ள
ஆசனங்களில் குருகுலத்தரையன்,
காங்கேயன், மழவர் மாணிக்கம் அமர்ந்துள்ளனர்.]
சுந்தரபாண்டியர் :
முடிசூட்டு விழா அப்படியொன்றும் சிறப்பாக
அமையவில்லை என்று கருதுகிறீரா,
காங்கயேரே? |