காங்கேயன் :
ஆம் அரசே! சோழ மண்டலச் சக்கரவர்த்தியின் முடிசூட்டு
விழாவிலே மூவுலகும் கூடும். எள் விழ இடமில்லாமல் முடிகொண்ட
சோழபுரத்தில் மக்கள் கூட்டம் சேரும். விழா
பத்து நாள், பதினைந்து
நாள் நடக்கும். இப்படிப்பட்ட எண்ணத்தோடு சென்ற நாங்கள்
ஏமாந்தோம்.
மழவர் மாணிக்கம் :
அரச விருந்தினராக ஐந்து நாள் தங்கியதே நானும்
காங்கேயனுமே, மற்றவர்கள்
விழாவின் மறுநாளே விடைபெற்றுச்
சென்றார்கள். சோழரின் உற்ற நண்பர்களான போசளர்கூட
மூன்றாம்
நாளே போய்விட்டார்கள்.
குருகுலத்தரையன் :
காங்கேயரே, விழாவிற்கு வந்திருந்த சோழ
அதிகாரிகளுடனும் சிற்றரசனுடனும்
கலந்து பேசினீர்களா? அவர்கள்
மனநிலை எப்படியிருக்கிறது என்று அறிந்தீர்களா?
காங்கேயன் :
விழாவிற்கு வந்த முக்கியமானவர்கள் அனைவரையும் கண்டு
பேசினோம். எல்லோரும்
சோர்வோடு பேசினார்கள். குலோத்துங்கன்
காலத்துப் போர்களினால் பாதிக்கப்பட்ட அவர்கள்,
போர் என்ற
சொல்லைக் கேட்டே கலங்குகிறார்கள்.
மழவர் மாணிக்கம் :
சோழ மன்னரைக் குறைகூறிப் பேசினேன். உடனே
அவர்கள் சீறுவார்கள்
என நினைத்தேன். யாரோ அந்நியனைப் பற்றிய
பேச்சைக் கேட்பது போல அக்கறையற்றுக் கேட்டார்கள்.
சிலர் என்
பேச்சையும் ஆதரித்தார்கள்.
காங்கேயன் :
முடிசூடிய இராசராசன் போரை விரும்பாதவன். தந்தையுடன்
பல களங்களில் பங்குகொண்டு
போரின் கொடுமைகளைக் கண்டு மனம்
குமுறிய |