பக்கம் எண் :

36வளவன் பரிசு

  போரிலே அவனுக்குத் துணையாக நின்ற படைத் தலைவன். 
  அரசியலறிவில்அவனொருசாணக்கியன். அவன் நட்பு நமக்குக் கிடைப்பது
  நல்லது.அமைச்சரே, கோப்பெருஞ்சிங்கனுக்குத் தக்க பரிசுகளனுப்பி நம்
  நட்பைத் தெரிவியுங்கள்.

குருகுலத்தரையன் : செய்கிறேன் அரசே!

சு. பாண்டியர் : வாணகோவரையர் படைத்திறன் பெற்றவர் அல்லர்.
  என்றாலும் சோழனுக்கு மாமன் என்ற முறையில் அவரது பகை
  இராசராசனுக்கு இழிவைத் தரும். அதனால் அவருக்கும் பரிசனுப்பி நமது
  நட்பைத் தெரிவியுங்கள்.

குருகுலத்தரையன் : அப்படியே அரசே!

சு. பாண்டியர் : காங்கேயரே, நமது படையைப் போர்க்கு ஆயத்தம்
  செய்துவையுங்கள். ஆனால் நாம் எப்போது படையெடுப்போம் என்பது
  படை வீரர்க்கும் தெரியாத இரகசியமாக இருக்கட்டும்.

காங்கேயன் : இந்த நொடி ஆணையிட்டால், மறு நொடி கிளம்பும்
  வகையில் நமது படை ஆயத்தமாக இருக்கிறது. நாம் எந்த நாட்டை
  நோக்கிச் செல்வோம் என்பது ஒருவருக்கும் தெரியாது.


சு. பாண்டியர் : முடிசூடிய இராசராசன் கொஞ்சம் ஓய்வு பெறட்டும்.
  அமைச்சரே, சோழனின் ஒற்றர் நம் அரண்மனை வாயிலை
  முற்றுகையிட்டிருப்பாரே!


குருகுலத்தரையன் : ஆம் அரசே! சோழ ஒற்றரின் நடமாட்டம் நம்
  தலைநகரில் அதிகமாகியுள்ளது என்று நம் ஒற்றர்கள் தெரிவித்தார்கள்.

சு. பாண்டியர் : அமைச்சரே, எப்போது நமது படை சோழப்புலியின் மீது
  பாயப் போகிறது என்பது இராச